December 6, 2025, 4:03 AM
24.9 C
Chennai

குளியலறையில் தீ குளித்த கர்ப்பிணி! இரண்டு வயது குழந்தையுடன் உடல் கருகி உயிரிழப்பு!

ranchana

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலிபுரம் கோட்டபாளையம் கலர்மேடு பகுதியை சார்ந்தவர் வேல்முருகன் (வயது 30). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இவரது மனைவி ரஞ்சனா (வயது 22). இவர்களுக்கு இரண்டு வயதுடைய கமலேஷ் என்ற மகன் இருக்கிறார். இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து 5 வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில், ரஞ்சனா தற்போது 2 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். வேல்முருகன் தனது மனைவி, குழந்தை, பெற்றோர்கள் என கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 15 ஆம் தேதியின் போது தருமபுரிக்கு பணிக்காக வேல்முருகன் சென்றுள்ளார்.

இந்த சூழ்நிலையில், நேற்று திடீரென காலை 7 மணியளவில் வீட்டின் குளியறைக்கு மகனை தூக்கிச்சென்ற ரஞ்சனா, குளியறையை தாழிட்டு மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இருவரும் உடலில் தீயின் வெப்பம் தாளாது அலறித்துடித்த நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இவர்களை மீட்டுள்ளனர்.

kamalesh

இருவரும் சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பட்டனர். இதில், தாயும் – மகனும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தர்மபுரியில் பணியாற்றி வந்த வேல்முருகன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories