அறந்தாங்கியில் திமுக சார்பில் முப்பெரும் விழா பொதுகூட்டம்
நடந்தது.கூட்டத்திற்கு வர்த்தக அணி அமைப்பாளர் முத்து தலைமை
வகித்தார்.வக்கீல்அணி அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்றார்.மாவட்ட பொருப்பாளர்
ரகுபதி முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் அவை தலைவர் பொன்துரை,சந்திரசேகரன்
,முன்னாள் எம்எல்ஏ கவிதைபித்தன்,நகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை
வகிததனர்.
கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு அதிமுக ஆட்சியின் செயல்பாடுகள்
குறித்தும் ஒபிஎஸ் குறித்தும் இபிஎஸ் குறித்தும் முன்னாள் முதல்வர்
மருத்துவமனையில் இருநதபோது அமைச்சர்கள் பதவியேற்ற விதம் குறித்தும்
பேசினர்.வருங்காலத்தில் திமுக செயல்தலைவர் முதல்வராக வந்து சாதனை படைப்பார்
என்றும் விவரித்து பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கியில் திமுக பொதுகூட்டம்
Published:


