அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்
சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்டிஒ அலுவலகத்தை முற்றுகையிடும்
போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் சுப்ரமணியன் தலைமையில் ; அனைத்து
விவசாயிகளுக்கும் காப்பீடு வழங்ககோரியும்,விவசாயிகள் பெற்ற கடனைதள்ளுபடி
செய்யகோரியும்,காவிரிகுண்டாறு இணைப்பு திடடத்தை விரைந்து செயல்படுத்தகோரியும்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யகோரியும் மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த
அனைத்துவிவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்ககோரியும் முற்றுகை போராட்டம்
நடந்தது இதில் நிர்வாகிகள் லட்சுமணன்,பாலசுப்ரமணியன், தென்றல் கருப்பையா உட்பட
அறந்தாங்கி ஆவுடையார்கோயில் மணமேல்குடி பகுதியை சேர்ந்த விவசாய சங்க
நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
அறந்தாங்கியில் விவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி முற்றுகை
Published:


