December 6, 2025, 6:49 AM
23.8 C
Chennai

ராஜபாளையம்… 3வது நாளாக மறியல் போராட்டம்; போலீஸ் குவிப்பு!

rajapalayam-public-protest1
rajapalayam-public-protest1

ராஜபாளையம் பகுதிகளில் மூன்றாவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது. பதற்றம் நீடிப்பதால் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக புதிய தமிழகம் கட்சியின், முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாலிங்கம் என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராஜாலிங்கத்தின் உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் உண்மையான கொலையாளிகளை கைது செய்ய வேண்டும், குற்றவாளிகளை கைது செய்த பின்பு தான், இறந்த ராஜாலிங்கத்தின் உடலை பெற்றுச் செல்வோம் என்று கூறி முதுகுடி ஊர் மக்கள், புதிய தமிழகம் கட்சியினர் கடந்த இரண்டு நாட்களாக, ராஜபாளையம் – திருநெல்வேலி நெடுஞ்சாலையில் தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.

rajapalayam-public-protest
rajapalayam-public-protest

நேற்று முதுகுடியைச் சேர்ந்த பாலமுருகன், சந்திரசேகரன், முத்துச்செல்வம், ராஜன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆனாலும் இதனை ஏற்க மறுத்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, இன்று காலையும் மறியல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இன்று ராஜபாளையத்தின் முக்கிய பகுதிகளில் சாலை மறியல் நடக்க இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் ராஜபாளையத்தின் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories