எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை… மீண்டும் சீரியஸ்!

Published:

spbalasubramanian
spbalasubramanian

எஸ் பி பாலசுப்ரமணியன் உடல்நிலை அபாயகரமாக உள்ளதாகத் தெரிகிறது. பிரபல பிண்ணனிப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் ஆரோக்கிய நிலை அபாயகரமாக உள்ளதாக தெரிகிறது.

கொரோனா தொற்று பாதித்ததால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களாக அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது. அண்மையில் கொரோனாவில் இருந்து அவர் குணம் அடைந்தார் என்று மருத்துவமனை அறிவிப்பில் வெளிவந்ததால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

ஆனால் கொரோனாவிலிருந்து குணமடைந்தாலும் பிற உடல்நிலைப் பிரச்சனைகள் அவருக்கு இருந்தன. இந்த மாதம் 19 ம் தேதியிலிருந்து அவருடைய உடல்நிலை குறித்து எம்ஜிஎம் மருத்துவமனை அதிகாரிகள் எப்படிப்பட்ட ஹெல்த் புல்லெடினும் வெளியிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

ஆயினும், ”உணவு எடுத்துக் கொள்ளும் எஸ்.பி.பி., விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப ஆர்வமாக உள்ளார்,” என்று அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித் துள்ளன. மருத்துவக் குழு தீவிரமாக கண்காணித்து வருகிறது. எக்மோ உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவரது உடல் நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

சற்று நேரத்தில் எஸ் பி பி யின் உடல் நிலை குறித்து ஹெல்த் புலெடின் வெளியிட உள்ளார்கள் என்று செய்தி வந்துள்ளது. எஸ்பி பாலுவின் உடல்நிலை குறித்து ரசிகர்கள் மீண்டும் கவலை அடைந்து உள்ளார்கள்.

கடந்த இருபத்தி நாலு மணி நேரங்களாக அவருடைய உடல்நிலை பாதிப்பு அடைந்துள்ளதாகவும் மேலும் நிலைமை அபாயகரமாக உள்ளதாகவும் தெரிகிறது. எஸ்பி பாலசுப்ரமணியத்தைப் பார்க்க கமலஹாசன் சென்றுள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img