ஓடிய பைக்கில் இருந்து ஒரே ஜம்ப்; குழந்தையை காப்பாற்ற இளைஞர் செய்த சாகசம்!

Published:

man-jump-and-save-child
man-jump-and-save-child

சிறு குழந்தையை காப்பாற்றுவதற்கு மோட்டர் பைக்கில் இருந்து குதித்து…

வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் யார் என்றே தெரியாத ஒரு சிறு குழந்தையைக் காப்பாற்றுவதற்காக சாகசம் செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வைரல் வீடியோ அண்மையில் இன்டர்நெட்டில் சுற்றிவருகிறது.

25 செகண்டுகள் ஓடும் இந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு சிறு குழந்தை சாலை அருகிலுள்ள ஒரு பள்ளத்தில் வழுக்கி விழுந்ததை கவனித்தார். ஆபத்தை உணர்ந்த அவர் உடனடியாக வினையாற்றினார்.

ஓட்டிக் கொண்டிருந்த வாகனத்தையும் தன் கைப்பையையும் இருந்தது இருந்தபடி போட்டுவிட்டு அந்த குழந்தையைப் காப்பாற்ற ஒட்டம் எடுத்தார். குழந்தைக்கு எந்த ஆபத்தும் நேரும் முன்பே அதனை காப்பாற்றி விட்டார். இதில் அந்த குழந்தை தொடர்பான ஒரு பெண்மணி வந்து குழந்தையை தூக்கி கொள்கிறார்.

இந்த சம்பவம் கொலம்பியாவில் நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பான வீடியோவை சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து உள்ளார்கள். 17 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளனது.

ALSO READ:  பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

“ஆமாம்… அவர் ஒரு அற்புதமான மனிதர்!” என்றும் “அந்த கணத்தில் குழந்தையைக் காப்பாற்றுவது மட்டுமே அவர் தன் முழுமுதற் கடமை என்று நினைத்தார்” என்றும் பார்த்தவர்கள் காமெண்ட் போட்டுள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img