மலைக் கோவிலில் 3500 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞர்

மலைக் கோவிலில் 3500 அடி உயரத்திலிருந்து கீழே தவறி விழுந்த இளைஞர் – பக்தர்கள் அதிர்ச்சி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சஞ்சீவி பெருமாள் மலைக் கோவிலில், 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில்பிராகாரத்தை  சுற்றிவர முயன்ற இளைஞர், கீழே தவறி விழுந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தா.பேட்டையில் சஞ்சீவி பெருமாள் மலைக்கோவில் உள்ளது. 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் உள்ள இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சுமாமியை தரிசனம் செய்வது வழக்கம்.
அவ்வாறு தரிசனத்திற்காக வரும் பக்தர்கள், மலை உச்சியில் இருக்கும் கோவில் பிராகத்தில் உள்ள பாறையை பிடித்தவாறே வலம் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
ஆபத்தான முறையில் பிராகரத்தை வலம் வரக் கூடாது என காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை பலகை வைத்திருந்தும் சில பக்தர்கள் ஆபத்தான முறையில் பிராகரத்தை சுற்றி வருகின்றனர்.
புரட்டாசி மாத 4ஆம் சனிக்கிழமையையொட்டி சஞ்சீவி மலைக்கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் பிரகாரத்தை வலம் வந்தபடி இருந்தனர். அப்போது இளைஞர் ஒருவர் கோவில் பிரகாரத்தை சுற்றி வர கோவில் சுவற்றை பிடித்து நடக்கத் தொடங்கினர். சில நொடிகளுக்குள்ளாகவே பாறை பிடிமானத்தை இழந்த இளைஞர் , 3 ஆயிரத்து 500 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து கீழே விழுந்த இளைஞர் யார், அவரின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories