மோடியின் பேச்சு அளித்த ஊக்கம்… பைக் வாங்க ஒரு குடும்பமே 3 வருடம் உழைப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைஸின் என்ற இடத்தில் சிறிய அளவிலான கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஹஸீப் ஹிந்துஸ்தானி. 
இவரது கனவு இருசக்கர வாகனம்…  ஹிரோ ஹோண்டா நிறுவனத்தின் ஸ்ப்ளென்டர் (Splendor) வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான்.
இந்நிலையில், அவரது இந்த கனவு இருசக்கர வாகனத்தை வாங்குவதற்காக அதன் மொத்த தொகையையும் சில்லறையாகக் கொடுத்து அப்பகுதி டீலரை திக்குமுக்காட வைத்துள்ளார்.
முதலில் அதனைப்பெற டீலர் மறுத்தாலும் பின்னர் அதன் காரணம் அறித்து சம்மதித்தார்.
தன்னுடைய கிராமத்தில் சிறிய அளவிலான கடை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர் ஹஸீப். 
அவருக்கு இந்த இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. இதற்காக அவர் ஒரு முடிவை எடுத்தார்.
அதன்படி தான் சம்பாதிக்கும் தொகையில் இருந்து தினமும் சேமித்து வந்துள்ளார். அவரது இந்த லட்சியத்துக்கு குடும்பத்தாரும் ஒத்துழைப்பு அளித்தனர். 
இதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேரும் இதற்காக சேமிக்கத் துவங்கினர்.
எனவே அந்த இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்பது ஹஸீப்பின் மொத்த குடும்பத்தின் விருப்பமாக மாறியது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கடந்த 3 வருடங்களாக சேர்த்து வைத்த மொத்தத் தொகையும் அந்த இருசக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு இருந்தது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதனைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அந்த இருசக்கர வாகனத்தை வாங்க ஹஸீப் முடிவெடுத்தார். எனவே தான் சேர்த்து வைத்திருந்த சில்லறைகளை ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 என பிரித்து எடுத்துச் சென்றார்.
முதலில் இதனை வாங்க மறுத்த டீலரும் அவரது இந்த பின்னணி தெரிந்த பின் சம்மதித்தனர். அதில் மொத்தம் 14,600 ஒரு ரூபாய் நாணயங்களும், 15,645 இரண்டு ரூபாய் நாணயங்களும், 1,458 ஐந்து ரூபாய் நாணயங்களும், 322 10 ரூபாய் நாணயங்களும் இருந்தன.
இதையடுத்து அந்த இருசக்கர வாகனத்தின் விலையான அவரது மொத்த சேமிப்பு ரூ.56,400-ஐ வழங்கி தனது வாகனத்தைப் பெற்றுச் சென்றார். கடந்த 3 வருடங்களுக்கு முன்னால் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது சிறிய பொருட்களின் மதிப்பு குறித்து விளக்கினார். 
பிரதமர் மோடியின் அந்த கருத்துதான் எங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது. தற்போது எங்கள் குடும்பத்தின் இலக்கு வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என ஹஸீப் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Topics

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories