மோடியின் பேச்சு அளித்த ஊக்கம்… பைக் வாங்க ஒரு குடும்பமே 3 வருடம் உழைப்பு

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரைஸின் என்ற இடத்தில் சிறிய அளவிலான கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் ஹஸீப் ஹிந்துஸ்தானி. 
இவரது கனவு இருசக்கர வாகனம்…  ஹிரோ ஹோண்டா நிறுவனத்தின் ஸ்ப்ளென்டர் (Splendor) வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான்.
இந்நிலையில், அவரது இந்த கனவு இருசக்கர வாகனத்தை வாங்குவதற்காக அதன் மொத்த தொகையையும் சில்லறையாகக் கொடுத்து அப்பகுதி டீலரை திக்குமுக்காட வைத்துள்ளார்.
முதலில் அதனைப்பெற டீலர் மறுத்தாலும் பின்னர் அதன் காரணம் அறித்து சம்மதித்தார்.
தன்னுடைய கிராமத்தில் சிறிய அளவிலான கடை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர் ஹஸீப். 
அவருக்கு இந்த இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. இதற்காக அவர் ஒரு முடிவை எடுத்தார்.
அதன்படி தான் சம்பாதிக்கும் தொகையில் இருந்து தினமும் சேமித்து வந்துள்ளார். அவரது இந்த லட்சியத்துக்கு குடும்பத்தாரும் ஒத்துழைப்பு அளித்தனர். 
இதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேரும் இதற்காக சேமிக்கத் துவங்கினர்.
எனவே அந்த இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்பது ஹஸீப்பின் மொத்த குடும்பத்தின் விருப்பமாக மாறியது. இதையடுத்து அவர்கள் அனைவரும் கடந்த 3 வருடங்களாக சேர்த்து வைத்த மொத்தத் தொகையும் அந்த இருசக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு இருந்தது.
தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதனைச் சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அந்த இருசக்கர வாகனத்தை வாங்க ஹஸீப் முடிவெடுத்தார். எனவே தான் சேர்த்து வைத்திருந்த சில்லறைகளை ரூ.1, ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10 என பிரித்து எடுத்துச் சென்றார்.
முதலில் இதனை வாங்க மறுத்த டீலரும் அவரது இந்த பின்னணி தெரிந்த பின் சம்மதித்தனர். அதில் மொத்தம் 14,600 ஒரு ரூபாய் நாணயங்களும், 15,645 இரண்டு ரூபாய் நாணயங்களும், 1,458 ஐந்து ரூபாய் நாணயங்களும், 322 10 ரூபாய் நாணயங்களும் இருந்தன.
இதையடுத்து அந்த இருசக்கர வாகனத்தின் விலையான அவரது மொத்த சேமிப்பு ரூ.56,400-ஐ வழங்கி தனது வாகனத்தைப் பெற்றுச் சென்றார். கடந்த 3 வருடங்களுக்கு முன்னால் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது சிறிய பொருட்களின் மதிப்பு குறித்து விளக்கினார். 
பிரதமர் மோடியின் அந்த கருத்துதான் எங்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது. தற்போது எங்கள் குடும்பத்தின் இலக்கு வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி என ஹஸீப் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories