ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத் த தயாரிப்பாளர்.

Published:

ஹீரோவாக சோனு சூட்… கர்ச்சீப் போட்டு வைத்த தயாரிப்பாளர்.

லாக்டௌன் நேரத்தில் சோனு சூட் புகழ் அசாதாரணமாக வளர்ந்துள்ளது. ஐநா சபை அவார்டு கிடைத்ததால் அவர் மேலும் ஒரு படி உயர்ந்துள்ளார்.

அப்படிப்பட்ட சோனு சூட்டை விட்டுவிடுவதற்கு யாரும் எண்ண மாட்டார்கள். சோனுசூட்டை வைத்து சினிமா எடுத்தால் ஃப்ரீயாக பப்ளிசிட்டி கியாரண்டியாக கிடைக்கும் என்று ஒவ்வொரு தயாரிப்பாளரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதனால் சோனூவை ஹீரோவாக வைத்து திரைப்படம் எடுப்பதற்கு ஒரு தெலுங்கு தயாரிப்பாளர் பக்கா பிளானோடு களத்தில் குதித்துள்ளார்.

லாக்டௌன் நேரத்திலேயே போனில் ஓரளவுக்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. முக்கால்வாசி போன் உரையாடலிலேயே சோனூவை ஹீரோவாக வைத்து சினிமாவை கன்ஃபார்ம் செய்துள்ளாராம்.

அண்மையில் ஒரு சினிமா ஷூட்டிங்குக்காக சோனூ ஹைதராபாத்துக்கு வந்ததால் அந்த தயாரிப்பாளர் அவசர அவசரமாக சென்று சோனூவை சந்தித்துப் பேசியுள்ளார். தான் தற்போது வில்லனாக புக் ஆகியுள்ள சினிமாக்கள் வெளிவந்த பிறகுதான் ஹீரோவாக திரையில் வருவேன் என்று கண்டிஷன் போட்டுள்ளாராம் சோனு சூட்.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

ஹீரோ, வில்லன் இவ்வாறு இரண்டு கப்பல்களில் பிரயாணம் செய்ய வேண்டுமென்று சோனு சூட் நினைக்கவில்லை. ஆனால் அந்த தயாரிப்பாளர் முதலில் ஹீரோவாக சினிமா அனௌன்ஸ் செய்யப்போகிறேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாராம். இரண்டு நாட்களில் தன் முடிவைக் கூறுவேன் என்றும் அதுவரை தனக்கு ஹீரோ வாய்ப்பு கொடுத்துள்ளதாக வெளியிடவேண்டாம் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.

முதல் சினிமாவை அவசர அவசரமாக அறிவித்து விட வேண்டும் என்று எண்ணிய அந்த தயாரிப்பாளர் சோனுசூட்டின் புகழைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாரா? அல்லது நல்ல சப்ஜெக்ட்டோடு சினிமா எடுக்க வேண்டும் என்று நினைக்கிறாரா என்ற விஷயம் இனிமேல்தான் தெரியும்.

Screenshot 2020 10 01 18 35 27 598 com.android.chrome - 2026

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img