என்னுடைய திட்டம் இதுதான்… அரசியல் பிரவே சம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.

என்னுடைய திட்டம் இதுதான்… அரசியல் பிரவேசம் குறித்து சோனு சூட் பரபரப்பு கருத்து.

லாக்டௌன் நேரத்தில் உதவிச் செயல்கள் மூலம் மக்களிடம் ரியல் ஹீரோவாக பெயர் பெற்றுள்ளார் நடிகர் சோனு சூட்.

தன் உதவி செயல்கள், அரசியலுக்கு வரவேற்பு போன்ற அம்சங்கள் குறித்து அவர் பரபரப்பு கருத்துக்களை கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக் காலத்தில் இவர் பெயர் உதவிச் செயல்களுக்கு மறுபெயராக மாறியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த கிராமங்களுக்குச் செல்வதற்காக பஸ்களை ஏற்பாடு செய்தது, உழவு மாடுகள் இல்லாமல் விவசாயம் செய்வதற்கு சிரமப்பட்ட குடும்பத்திற்கு டிராக்டர் வாங்கித் தந்தது, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது… போன்ற பல நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதை வென்றுள்ளார் சோனுசூட். எங்கோ யாருக்கோ கஷ்டம் என்ற ஒரு சொல் காதில் விழுந்தால் போதும்… முடிந்த அளவுக்கு உதவி செய்து சோஷியல் மீடியாவில் ஹீரோவாக மாறியுள்ளார் இந்த சினிமா வில்லன்.

சினிமாவில் வில்லன் பாத்திரங்கள் மூலம் மக்களை அச்சுறுத்தினாலும் நிஜ வாழ்க்கையில் தன் சேவை நிகழ்ச்சிகள் மூலம் ரியல் ஹீரோ என்ற விருதினை மக்களிடமிருந்து பெற்றுள்ளார்.

பல நாட்களுக்குப் பிறகு ‘அல்லடு அதர்ஸ்’ என்ற தெலுங்கு சினிமா சூட்டிங்குக்காக ஹைதராபாத் வந்த சோனு சூட்டை திரைப்பட யூனிட் சிறப்பாக பாராட்டி வாழ்த்தியது.

சோனு சூட்டுக்கு ரகசிய அஜெண்டா இருக்கிறது என்றும் அவர் அரசியலுக்கு வருவார் என்றும் கமெண்ட்டு செய்பவர்கள் இல்லாமல் இல்லை. அவர் தனி ஒருவராகவே இத்தனை உதவிகளை எவ்வாறு செய்கிறார் என்று சிலர் கேள்வி எழுப்பாமல் இல்லை.

இந்த பின்னணியில் அவர் ஒரு மீடியாவிற்கு அளித்த பேட்டியில் இது குறித்து கருத்து தெரிவித்தார். முடிந்தவரை தேவையானவர்களுக்கு உதவி செய்வது தான் என்னுடைய நோக்கம் என்று தெளிவாகக் கூறினார். தன்னோடு கூட தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவி கோரி பல இமெயில்கள் வருகின்றன என்றார். அவர்களில் மிக மிகத் தேவை உள்ள யாருக்கு உதவி செய்ய வேண்டும் என்று அடையாளம் கண்டு என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன் என்றார்.

‘நீதி கோயல்’ என்ற நண்பர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பஸ்கள் ஏற்பாடு செய்யும்போது உதவி புரிந்தார் என்று கூறினார். அதன்பிறகு தன்னோடு சேர்ந்து பல உதவி நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்கு பலரும் முன்வந்துள்ளதாக குறிப்பிட்டார். தற்போது இந்தியா எங்கும் பல இளைஞர்கள் தன்னோடு சேர்ந்து பணிபுரிந்து வருவதாகவும் கூறினார். முடிந்தவரையில் அதிகமானவர்களுக்கு உதவி செய்வது தான் தன் நோக்கம் என்றார்.

ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்தால் நம் நாடு மாறி விடும் என்றார்.

கடந்த பத்தாண்டுகளாக நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று பல அழைப்புகள் வந்தாலும் நான் ஆர்வம் காட்டவில்லை. தற்போதும் எனக்கு அந்த ஆர்வம் இல்லை.

இப்படிப்பட்ட உதவி நிகழ்ச்சிகளில் எந்த ஒருவரும் தனியாக செய்ய முடியாது. நமக்கு நல்ல எண்ணம் இருக்கும் போது நம்மோடு சேர்ந்து பணிபுரிவதற்கு பலர் முன்வருவார்கள். அந்த விதமாகவே பலர் என்னுடைய சேவை நிகழ்ச்சிகளுக்கு உதவி புரிகிறார்கள். என்னிடம் உதவி கோரி வருபவர்களின் பிரச்சினை உண்மையானதா இல்லையா என்ற விஷயத்தை என்னுடைய குழு பரிசீலிக்கிறது. 10 சதவீதம் பேர் பொய் கூறி உதவி கேட்பவர்கள். மீதி 90% பேர் உண்மையானவர்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலர் இந்த வாய்ப்பை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று காரணம் காட்டி உண்மையிலேயே தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துவது சரியல்ல.

லாக்டௌனுக்குப் பிறகு எனக்கு சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் கூட மாறி வருகிறது. எனக்கு நடிப்பில் இப்போது செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பிக்க போகிறது என்று மகிழ்ச்சியாக கூறினார் சோனு சூட்.

Screenshot 2020 10 01 19 02 30 556 com.android.chrome - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories