முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட திமுக தலைவர் மு.கருணாநிதி முரசொலி அலுவலகத்துக்கு இன்று வந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் உள்ளிட்டோர் அவரை அழைத்து வந்தனர்.
கருணாநிதி உடல்நலக்குறைவால்பொது நிகழ்ச்சியில் சுமார் ஒரு வருட காலமாக தவிர்த்து வந்தார்.அதன் பிறகு இன்று முரசொலி அலுவலகத்துக்கு வந்து முரசொலி பவளவிழா கண்காட்சியை அவர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


