திருச்சியில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகம் முழுவதும் சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான திருச்சியில் உள்ள டாக்டர் சிவகுமார் வீட்டிலும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.



