எம்.ஜி்.ஆர் நூற்றாண்டு விழாவில் கருப்பு பேட்ஜ் அணிய பத்திரி்கையாளர்கள் முடிவு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே அமைந்துள்ள இஸ்ரோ மையத்தின் பின் பகுதியில் கடந்த மாதம் பாறை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டு சிதறியது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட  புதிய தலைமுறை நெல்லை மண்டல தலைமை செய்தியாளர் நாகராஜன், வள்ளியூர் புதிய தலைமுறை செய்தியாளர் ரஜூவ் கிருஷ்ணா மற்றும் தினகரன் வள்ளியூர் செய்தியாளர் ஜெகன்  ஆகியோர் மீது பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உண்மைக்கு புறம்பாக இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக அந்த வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றப்ப்பட்டார். மேலும், இதில் காவல்துறையினர் பத்திரிக்கையாளர்களை கைது செய்யமாட்டார்கள் என்ற உத்ரவாதமும் தமிழக காவல்துறை தலைவர் திரு. டிகே ராஜேந்திரனால் அனைத்து பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கொடுத்தார். டிஜிபியின் வாக்கினை முழுமையாக நம்பி பத்திரிக்கையாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்தநிலையில், அவருடையை உத்தரவை மீறி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அருண்சக்தி குமார் உத்தரவின்பேரில்  தினகரன் பத்திரிக்கையாளர் ஜெகன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மற்றொரு அடிதடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் அவருக்கு பிணை கிடைக்க முயற்சித்தபோது, இஸ்ரோ வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவும், தமிழக காவல்துறை தலைவரின் உத்தரவையும் மீறி நடைபெற்ற கைதாக திருநெல்வேலி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில், ஜனநாயக ரீதியில் போராடுவது என நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று கூடிய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வரும் 12ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கருப்பு பேட்ஜ் அணிந்து செய்தி சேகரிப்பது என முடிவெடுக்பட்டுள்ளது. இதனை தவிர தங்களது எதிர்ப்பினை பதிவு செய்வதற்கு வேறு வழியில்லை எனவும், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி, அரசு உயரதிகாரிகள், பிற அரசியல் கட்சி தலைவர்கள்,  சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகையாளர்கள்
 மீதான தாக்குதல் ஜனநாயகத்தை நசுக்கும் செயலாக பொதுமக்கள் பார்க்கின்றனர். 
இத்தகவலை செய்தியாளர்கள் வாட்ஸாப் மூ
லம்  பகிர்ந்துவருகின்றனர்
ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories