மனு தர்மத்தின் பெயரால் இந்து பெண்களை மிகவும் கேவலமாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை கண்டித்து தென்காசி மாவட்டம் புளியங்குடியில் விஎச்பி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் தென்காசி மாவட்ட தலைவர் வன்னியராஜன் தலைமையில் இந்த ஆர்பாட்டம் புளியங்குடியில் இன்று மாலை 5 30 க்கு நடைபெற்றது
இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் .விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்ட இணை செயலாளர் S. முருகன் நகர செயலாளர் கார்த்திக் மற்றும் அருண் மற்றும் VHP பஜ்ரங் தள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்