அர்ணாப் கைது: தேசிய சிந்தனைக் கழகம் கண்டனம்!

arnab-arrest
arnab-arrest

ரிபப்ளிக் டி.வி. தலைமை ஆசிரியர் அர்ணாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதற்கு தேசிய சிந்தனைக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேசிய சிந்தனைக் கழகம் (தமிழ்நாடு) மாநில அமைப்புச் செயலாளர் ம.கொ.சி.ராஜேந்திரன் இது குறித்து வெளியிட்ட அறிக்கை:

ரிபப்ளிக் டி.வி. செய்தி சேனலின் தலைமை ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளருமான திரு. அர்ணாப் கோஸ்வாமி இன்று காலை (4.11.2020) மும்பை போலீஸால் அவரது வீட்டில் அடாவடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தேசிய சிந்தனைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரான இந்த நடவடிக்கையை தேசநலனில் அக்கறை உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

ரிபப்ளிக் டி.வி. மூலமாக, இந்திய விரோத சக்திகளை அம்பலப்படுத்தி வந்தவர் அர்ணாப் கோஸ்வாமி. அவரது சேனலுக்கு ஸ்டூடியோ அமைத்துக் கொடுத்த அரங்க அலங்கார நிபுணர் திரு. அன்வய் நாயக்கும் அவரது தாயும் 2018-இல் தற்கொலை செய்துகொண்டனர். அதற்கு, ரிபப்ளிக் டி.வி. நிறுவனம் தனக்குக் கொடுக்க வேண்டிய ரூ. 5.4 கோடி கட்டணத்தைக் கொடுக்காததே காரணம் என்று தற்கொலைக் குறிப்பு எழுதியிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அதனை விசாரித்த மும்பை போலீஸ் அந்தப் புகாரில் முகாந்திரமில்லை என்று வழக்கைக் கைவிட்டுவிட்டது. 2018-இல் அவர் மீதும் அவர் சார்ந்த நிறுவனம் மீதும் தொடுக்கப்பட்ட அந்தக் குற்ற வழக்கை மீண்டும் தூசுதட்டி, அவரை தற்போது மகாராஷ்டிர அரசு கைது செய்துள்ளது. இதற்கு அவர் மீதான தனிப்பட்ட பகையே காரணமாகும்.

ALSO READ: ரிபப்ளிக் டிவி அர்னாப்  கோஸ்வாமி கைது – அடித்து இழுத்து சென்ற போலீசார்?

குறிப்பாக, இந்த ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தை அதிரச் செய்த இரு குற்ற நிகழ்வுகளை பெரிதுபடுத்தி ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தை ரிபப்ளிக் டி.வி. ஈர்த்தது. அதில் ஒன்று பால்கரில் நடைபெற்ற பால்கர் சாதுக்கள் படுகொலை (16.4.2020). சூரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த இரு அப்பாவி இந்து துறவிகளை பால்கர் என்னுமிடத்தில் காவல் துறையினரின் கண்ணெதிரில் கும்பல் ஒன்று அடித்து கொலை செய்தது. அதற்கு எதிராக நியாயத்தின் குரலாக அர்ணாப் ஒலித்தார். அதனால் மகாராஷ்டிர அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.

அதேபோல, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியாக நடித்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட (14.6.2020) நிகழ்விலும், அதன் பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர், போதைப்பொருள் கும்பல் உள்ளிட்டோரை அம்பலப்படுத்தியது ரிபப்ளிக் டி.வி. இதனைக் கண்டித்த நடிகை கங்கனா ரணாவத் மகாராஷ்டிர அரசால் வேட்டையாடப்பட்டார்; அதையும் அர்ணாப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

e0aeb0e0aebfe0aeaae0aeaae0af8de0aeb3e0aebfe0ae95e0af8d-e0ae9fe0aebfe0aeb5e0aebf-e0ae85e0aeb0e0af8de0aea9e0aebee0aeaae0af8d-e0ae95

மகாராஷ்டிர அரசுக்கு எதிராகவும் அம்மாநில போலிஸுக்கு எதிராகவும் தொடர்ந்து அச்சமின்று செய்திப் போரை நடத்திவந்ததால்தான், அர்ணாப் கோஸ்வாமி மீது தற்போது அம்மாநில அரசு ஜனநாயக விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டபோது சட்டப்படியான நடைமுறைகளை மகாராஷ்டிர போலீஸ் கையாளவில்லை.

இவ்வாறு அரசுக்கு எதிராக பத்திரிகைத் துறையில் இயங்குவோரை நசுக்க காவல் துறை பயன்படுத்தப்படுவது 1975 கால நெருக்கடிநிலையையே நினைவுபடுத்துகிறது. இதனை தேசிய சிந்தனைக் கழகம், அதன் அகில பாரத அமைப்பான பிரக்ஞா பிரவாஹ் அமைப்புகளின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சட்டம் தனது கடமையைச் செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், தனக்கு வேண்டாதோரை வேட்டையாட சட்டத்தை அரசு ஒரு கருவியாக்குவதை ஏற்க இயலாது. திரு. அர்ணாப் கோஸ்வாமியை மகாராஷ்டிர அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.

பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் போன்ற ஜனநாயக விழுமியங்களின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் திரு. அர்ணாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதைக் கண்டிக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க பத்திரிகை துறையினர் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன் மூலமாகவே, ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகை சுதந்திரம் காப்பாற்றப்படும்…என அந்த அறிக்கையில் ம.கொ.சி.இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories