காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது!

policeand-camera
policeand-camera

காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் இனி கண்காணிப்பு கேமராவிடமிருந்து தப்பிக்க முடியாது! மதுரையின் அனைத்து முக்கியமான சந்திப்புகளில் அதிநவீன கேமராக்கள் அறிமுகம் – மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம ஆனந்த் சின்ஹா துவக்கிவைத்தார்.

மதுரை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளையும் புதிய முயற்சிகளையும் எடுத்துவருகிறது.

அந்தவகையில் மதுரை நகரின் அனைத்து சிக்னல், முக்கியமான சந்திப்புகள் சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்து பொதுமக்கள் வாகன ஒட்டிகளின் பாதுகாப்பு கருதி கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் கண்காணிப்பை தீவிரபடுத்தும் வகையில் மதுரை மாநகர காவல்துறை அதிநவீன தொழில்நுட்பத்துடன் மதுரை தெப்பக்குளம் சந்திப்பு உட்பட நகரின் 15 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கேமரா வாகன நம்பர் பதிவேடு உட்பட அனைத்தையும் துல்லியமாக பதிவுசெய்யக்கூடிய வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

இனிமேல் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் செல்லும் வாகன ஒட்டிகள் காவலர்களிடமிருந்து தப்பித்தாலும் கண்காணிப்பு கேமரா விடம் இருந்து தப்பிக்க முடியாது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

அந்தவகையில் இன்று மதுரை நகரின் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கண்காணிப்பு கேமரா துவக்க விழாமதுரை தெப்பக்குளத்தில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில்சட்டம் ஒழுங்கு காவல் துறை உதவி ஆணையாளர் சிவ பிரசாத், உதவி ஆணையாளர்கள் சூரக் குமரன் திருமலைக்குமார்உட்பட காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மாநகர காவல்துறை ஆணையாளர்பிரேம் ஆனந்த் சின்காகூறுகையில்,

மதுரை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகைகளும் விபத்துக்களை தவிர்க்கும் வகையிலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும் மாநகர காவல்துறை புதிய முயற்சிகளையும் நடவடிக்கைகளையும்கையாண்டு வருகிறது

இந்த வகையில் மதுரைநகர் நுழைவாயில் உட்படபாலங்கள் சந்திப்புகள் எனமுக்கியமான இடங்களில்அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது

இந்த கண்காணிப்பு கேமரா வானது வாகனங்களின் நம்பர் என்னை சரியாக படம் எடுத்து பதிவிடும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

இனிமேல் ஹெல்மெட் அணியாமல் சென்றால் விபத்து ஏற்படுத்திவிட்டு எடுக்காமல் சென்றாலோ கண்காணிப்பு கேமராவின் வாகன பதிவு நம்பர் வாகன ஓட்டி மிகத் துல்லியமாக பதிவாகிவிடும்

இதன் மூலம் சந்தேகத்துக்குரிய வாகனங்களை கண்காணிக்க வாகனங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும் முடியும் என்று கூறினார் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories