சொந்தமாகக் கார் வாங்கி ஓட்டலாம்: ஸ்டேட் பாங்க் ஏற்பாடு

Published:

சென்னை: ஓட்டுநருக்கான சிறப்பு நிதி உதவித் திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ தொடங்கியுள்ளது. ஓலா வாடகை கார் நிறுவனமும், எஸ்.பி.ஐ.யும் இணைந்து வாடகை கார் ஓட்டுநர்கள் பயனடைவதற்கான “ஓலா பிரகதி’ என்ற இந்த திட்டத்தை நேற்று சென்னையில் அறிமுகம் செய்து வைத்தது. இது குறித்து வங்கி முதன்மை பொது மேலாளர் பிரகாஷ் ராவ் பேசியபோது, கார் ஓட்டுநர்கள் தொழில்முனைவதற்கான திட்டத்தில், விரைவாக நிதி உதவி பெறும் வசதி, எளிய முறையில் தவணை செலுத்தும் வசதி, மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் நேரடியாக வங்கியை அணுகும் முறை உள்ளிட்டவற்றைப் பயனாளிகள் பெறலாம். மேலும், வாடகைக் கார் ஓட்டுநர்கள் விரும்பிய கார்களை வாங்கிகொள்வதற்கு 90 சதவீத நிதியை வங்கி தருகிறது. பயனாளிகள் 2-3 ஆண்டுகளில் பணத்தைத் திருப்பி செலுத்தி கார்களை உரிமையாக்கிக் கொள்ளலாம். இந்தியாவில் சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, உள்ளிட்ட நகரங்களில் கடந்த 2 நாட்களில் மட்டும் 150 கார்களுக்கு நிதி உதவியளித்துள்ளோம். மேலும், ஓலா நிறுவனம் இத்திட்டத்திற்கென ரூ.100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்படி, நாட்டின் பல்வேறு நகரங்களில் 15 ஆயிரம் கார்களுக்கு நிதி உதவி வாய்ப்பினை கார் உரிமையாளருக்கு ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டுநர்கள் தொழில் முனைவோராகவும், உரிமையாளராகவும் விளங்கும் முறையில் இத்திட்டம் செயல்படும். – என்றார்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img