முன்னாள் அமைச்சர் பரமசிவன் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல்

Published:

சென்னை; தமிழக முன்னாள் அமைச்சர் அ.மா. பரமசிவன் மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி: மதுரை புறநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அ.மா. பரமசிவன் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.அதிமுகவில் மாணவர் அணி அமைப்பாளர், தொகுதி அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் கட்சிப் பணியாற்றிய அவர், எம்.எல்.ஏ.வாகவும், அமைச்சராகவும் மக்கள் பணியாற்றியவர். பரமசிவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் எல்லா இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img