இந்தியாவின் அதிக வயதான பெண்மணி குஞ்சன்னம் மரணம்

Published:

kunnamkutti திருச்சூர்: இந்தியாவின் மிக வயதான பெண்மணி குஞ்சன்னம் குட்டி மரணம் அடைந்தார். இவர் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தவர். உடல்நலக் குறைவு காரணமாக கேரளாவில் மரணமடைந்த அவருக்கு தற்போது வயது 112. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சூண்டல் அருகே உள்ள பரனூரைச் சேர்ந்தவர் குஞ்சன்னம். சிறுவயது முதலே வீட்டு வேலை செய்யும் பெண்ணாக இருந்து வந்த குஞ்சன்னம், திருமணம் செய்து கொள்ளவில்லை. காலணி அணிவதில்லை, பேருந்தில் பயணிப்பதில்லை, ரயில், விமானத்தைப் பார்த்ததில்லை, இப்படி தனது சொந்த கிராமத்திலேயே எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் குஞ்சன்னம். இவர் குறித்து, குடும்பத்தார் லிம்கா சாதனைப் புத்தகத்துக்கு தகவல் அளித்தனர். குஞ்சன்னத்தின் வயதுக்கு சாட்சியாக 1903ம் ஆண்டு பரனூர் எரானெல்லூர் தேவாலயத்தில் வழங்கப்பட்ட ஞானஸ்நான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் வயதான பெண்மணியாக குஞ்சன்னம் அறிவிக்கப் பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி இருந்த குஞ்சன்னம், திங்கள் முதல் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து திங்கள் மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையைத் தேற்ற மருத்துவர்கள் முயன்றனர். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இன்று காலை அவர் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்கு, புதன்கிழமை நடைபெறவுள்ளது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img