அம்மன் கோவிலில் சிலுவை வரைந்து அட்டூழியம்!

Amman-temple-1
Amman-temple-1

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்து கோவில் ஒன்றில் சிலுவையை வரைந்து வைத்து மத பிரச்சினையைத் தூண்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவில் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி உள்ள எல்லப்பள்ளி கிராமத்தில் பல ஆண்டுகளாக 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அம்மன் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

இந்தக் கோவிலின் வெளிப்புற சுவர்களிலும் அம்மனுக்கு முன் தரையிலும் சிலுவையை வரையப்பட்டு இருந்ததை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

cross-1
cross-1

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த அவர்கள், புகாரில் பல ஆண்டுகளாக இந்த கோவிலில் வழிபட்டு வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் ஏற்கனவே இந்த கோவிலில் உள்ள சிலைகளையும் உண்டியலையும் உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதுகுறித்து இரண்டு முறை புகார் அளித்து அவர் கைது செய்யப்பட்ட போதும் மீண்டும் 14.1.2021, பொங்கல் திருநாளன்று இரவு மின் விளக்குகளை அணைத்துவிட்டு கோவிலைச் சுற்றிலும் சிலுவையை வரைந்து வைத்து கிறிஸ்தவ ஆலயமாக மாற்ற முயற்சி செய்ததாக புகார் அளித்துள்ளனர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்த செயலை தட்டிக்கேட்ட பொதுமக்களிடம் “உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் பின்னால் 5 பேர் இருக்கின்றனர். அவர்களின் தூண்டுதலின் பேரில்தான் நான் வரைந்து வைத்துள்ளேன். உங்களால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது” என்று கூறி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.

kovil-1
kovil-1

கோவிலை ஒட்டி சாலையின் இருபுறமும் சிலுவையை வரைந்து வைத்துள்ளார். அவரது மதக்கலவரத்தை தூண்டும் விதமான செயல்பாடுகளை குறிப்பிட்டு இதற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

புகார் கடிதத்துடன் கோவிலில் சிலுவை வரைந்து வைத்த புகைப்படத்தையும் சாலையில் இரு புறங்களில் உள்ள மின் கம்பங்களிலும், பாலத்திலும் சிலுவை வரைந்து வைத்ததற்கான புகைப்பட ஆதரங்களை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பாஸ்கரை கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கோவில்கள் தாக்கப்படுவதும் கடவுள் சிலைகள் உடைக்கப்படுவதும் வாடிக்கையாகி வரும் நிலையில் ஆந்திர எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் இத்தகைய சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories