முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம்! ஆயுள் தண்டனை அதிரடி தீர்ப்பு!

kaithu
kaithu

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(32). இவர் திண்டிவனத்தை சேர்ந்த மஞ்சுளா (25) என்ற பெண்ணை காதலித்து கடந்த 2010ஆ ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான பிறகு மஞ்சுளாவை தனது வீட்டுக்கு அழைத்து செல்லாத ராஜேஷ்குமார், அவரது தாயார் வீட்டிலேயே விட்டுவிட்டு சென்னைக்கு சென்றிருக்கிறார். மாதத்துக்கு ஒருமுறை வந்து செல்வதுமாக இருந்திருக்கிறார்.

இதனிடையே, மஞ்சுளா கருவுற்ற நிலையிலும் மாத்திரை வாங்கி கொடுத்து கருவைக் கலைத்துள்ளார் ராஜேஷ்குமார்.

இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு மஞ்சுளாவை சென்னைக்கு அழைத்துச் சென்ற ராஜேஷ்குமார், மஞ்சுளா தனது தாயார் வீட்டுக்கு சென்று திரும்பும் கேப்பில் கோமதி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் மஞ்சுளாவுக்கும் ராஜேஷ்குமாருக்கும் சண்டை மூண்டுள்ளது. சண்டையின்போது மஞ்சுளாவை சாதிப் பெயர் சொல்லி தகாத வார்த்தையில் திட்டியிருக்கிறார் ராஜேஷ்குமார்.

இது குறித்து, மஞ்சுளா அளித்த புகாரின் பேரில் ராஜேஷ் குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. முதல் மனைவியை ஏமாற்றி விட்டு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு ரூபாய் 1000 அபராதமும் விதித்தது. இதையடுத்து, ராஜேஷ்குமார் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories