போக்குவரத்து ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

சென்னை: அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், திரும்பாத பட்சத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.

மேலும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மீது நோட்டீஸ் அளித்து அரசு நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பள உயர்வு, போனஸ் தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டதால், போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாகவும், அரசு ஒப்பந்தத்தை பல சங்கங்கள் ஏற்றுக் கொண்டன; ஆனால் தொமுச, சிஐடியு உள்ளிட்ட சில சங்கங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதனாலேயே மக்கள் அவதிப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.

இதை அடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மீது நோட்டீஸ் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும், பணிக்கு வராதவர்கள் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும்; ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். மேலும், ஆம்புலன்ஸ், நர்சுகள் போராட்டத்தின் போது பல அறிவுரைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது; வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சங்கங்கள் விளக்கமளிக்க அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

இந்நிலையில், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகி சவுந்திரராஜன், “இது ஒருதலைப்பட்சமானது. எங்களின் கருத்தை எவரும் கேட்கவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்கு அரசுதான் பொறுப்பு. தொழிலாளர்கள் இல்லை. முதலில், அரசுக்கு நீதிமன்றம் அறிவுரை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories