போதையால் எல்லோர் மீதும் மோதிவிட்டு நின்ற கார்! துப்பாக்கி வெடிகுண்டுகளுடன் மாட்டிய இம்ரான் அஜீஸ்!

car
car

பொதுமக்களை இடித்துவிட்டு நிற்காமல் சென்ற காரை போலீசார் சோதனை செய்தபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் வீ.கோட்டா ரோடு சந்திப்பு சாலையில் நேற்று மதியம் சுமார் ஒரு மணியளவில் கார் ஒன்று பயங்கர வேகமாக சென்றுள்ளது. வேகமாக சென்ற கார் அந்த பகுதியில் அமைந்துள்ள பாஞ்சர் கடை ஒன்றில், சைக்கிளுக்கு பஞ்சர் பார்த்துக்கொண்டிருந்த வசீம் என்ற இளைஞர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுள்ளது.

இதனை அடுத்து அங்கிருந்த மக்கள் காரை துரத்திச்சென்றபோது, அந்த கார் 4 கம்பம் தெருவில் பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இதனால் பொதுமக்கள் மேலும் பதற்றமடைந்தநிலையில், அந்த கார் சிறிது தூரத்தில் டயர் வெடித்து ரு பெட்டிக்கடையில் மோதி, பின்னர் அதேபகுதியில் உள்ள மரத்தில்மோதி நின்றது.

இதனிடையே காரை துரத்திச்சென்ற மக்கள் காரில் இருந்த நபரை பிடித்து, அவருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது அவர் போதை மயக்கத்திலிருந்தார்.

மேலும் அந்த பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்தநிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

மேலும் காரை ஓட்டிவந்த இளைஞர் பேரணாம்பட்டு டவுன் லால் மசூதி தெருவை சேர்ந்த அப்துல்அஜீஸ் என்பவருடைய மகன் இம்ரான் அஜீஸ் (38) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து அந்த நபர் ஓட்டிவந்த காரை சோதனை செய்தபோதுதான் போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் காத்திருந்தது.

அந்த இளைஞர் ஓட்டிவந்த காரில் 2 துப்பாக்கிகள், ஒரு கத்தி, ஒரு வாள், 4 செல்போன்கள், வெடிகுண்டு போன்ற ஒரு பொருள், விதவிதமான நம்பர் பிளேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் பி டி.வி.9 என்ற பெயரில் வேலூர் மாவட்ட பத்திரிகையாளருக்கான அடையாள அட்டையும் இருந்துள்ளது.

இதனால் அந்த இளைஞர் மீது மேலும் சந்தேகமடைந்த போலீசார், அந்த இளைஞருக்கு ஏதேனும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என விசாரித்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories