December 5, 2025, 11:50 PM
26.6 C
Chennai

பிச்சைக்காரர்களின் லஞ்சம் வாங்கிய பெண்!

corption
corption

புதுக்கோட்டை கீழராஜா வீதி அருகே உள்ள சாந்தநாதர் சுவாமி கோவில் உள்ளது. இது ரொம்ப ஃபேமஸ் ஆன கோயில். இதனால் கோவிலின் வெளியே யாசகம் கேட்பவர்கள் சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.

கோயிலுக்கு வருபவர்கள் இவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வார்கள். குறிப்பாக, தை அமாவாசை தினத்தன்று இங்கு ஏகப்பட்ட பக்தர்கள் திரண்டு வருவதால், அன்றைய தினம் தான் இவர்களுக்கு ஓரளவு சொற்ப பணம் கூடுதலாக கிடைக்கும்.

அப்படித்தான் இந்த அமாவாசைக்கும் பக்தர்கள் திரண்டு வந்தனர். கோயில் வாசலில் பிச்சை எடுக்க வந்தவர்களிடம் பொதுமக்கள் யாசகம் தந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் இந்திராணி அங்கே வந்தார். இவர் அதிகாரி இல்லை. அதே கோயில் ஊழியர் ஆவார். அதுவும் தற்காலிக ஊழியர். அந்த கோயிலை சுத்தம் செய்பவராம். அங்கிருந்த பிச்சைக்காரர்களிடம் இந்திராணி தலா 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார். மேலும், அமாவாசையில் தர்ப்பணம் கொடுக்கும் தொழில் செய்யும் புரோகிதர்களிடமும் தலா 1,600 ரூபாய் இந்திராணி வாங்கியிருக்கிறார்.

இதனால், அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்த பிச்சைக்காரர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தகவல் சொல்ல.. அந்த அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஆனால், போலீசாரோ, இந்திராணியை கைது செய்யவில்லை போல தெரிகிறது.

“இனிமேல் இப்படியெல்லாம் பணம் வசூலிக்கக்கூடாது” என்று வார்ன் செய்து மட்டும் இந்திராணியிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி கொண்டு, அவரை திருப்பி அனுப்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. இது பிச்சைக்காரர்களுக்கு மேலும் அதிருப்தியை தந்துள்ளது. ஆனால், லஞ்சம் வாங்குவது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி விட்டது. இவங்களையும் விட்டுவைக்கலையா? என்று கேட்டு பொதுமக்கள் கொந்தளித்து போயுள்ளனர்.

இந்த வீடியோ நிறைய ஷேர் ஆக ஆரம்பித்தது. இதன்விளைவு, புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசாருக்கு மாவட்ட எஸ்பி, தீவிரமான நடவடிக்கையை உடனே எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. அந்த வீடியோவில் 10 ரூபாய் நோட்டை அவ்வளவு அலட்சியமாக எண்ணுகிறார் அந்த பெண். ஒரு வயசான தாத்தாவை பிச்சை எடுக்க விடாமல், கோயில் வாசலில் இருந்து விரட்டுகிறார்.

“இங்கே வந்து பிச்சை எடுக்க வேண்டுமானால் மாச மாசம் 1000 ரூபாய் தர வேண்டும்” என்கிறார். அதுமட்டுமல்ல, ஒரு வயதான தம்பதி இங்கு வாசலில் பிச்சை எடுத்து வருகிறார்கள். “இந்த பெண்ணுக்கு 1000, 1000ரூபாய் என 2 ஆயிரம் தந்துவிட்டுதான் கோயில் வாசலில் தாங்கள் உட்கார்ந்திருக்கிறோம்” என்று கண்ணீர் மல்க சொல்கிறாராம்.

பிச்சை எடுத்த சில்லறை காசுகள், 10 ரூபாய் நோட்டுக்களை எல்லாம் அங்கிருக்கும் கடைகளில் கொடுத்து, 500 ரூபாயாக மாற்றி கொண்டு கிளம்பி செல்வாராம் இந்த பெண்! அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடிவரும் நிலையில், பிச்சைக்காரர்களிடமும் லஞ்சம் வாங்கியிருப்பது இந்த தமிழ்நாட்டுக்கே ஒரு அவமானமாக விளங்கி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories