‘தோழர்’ தா.பாண்டியன்!

தா பாண்டியன்
தா பாண்டியன்

கடைந்தெடுத்த பிராமண துவேஷி… ஈவேரா சிந்தனைகளை சிவப்புத் துண்டால் போர்த்தியபடி வலம் வந்தவர்… இதெல்லாம் அவரது குணாதிசயம் சார்ந்த நிலைப்பாடுகளாக இருக்கலாம்!

ஆனால்…

திராவிட இயக்கக் காட்டுமிராண்டிகள் ‘கம்பராமாயணத்தைக் கொளுத்துவேன்’- என்றும்…

‘கம்பரசம்’ என்று எழுதியும் கம்பனைக் கொச்சைப்படுத்திய போது…

தோழர் ப.ஜீவானந்தம் அவர்கள்தான் கம்பனை உயர்த்திப் பிடித்த நிலையில் அவருக்கு உற்ற தளபதியாக மேடைதோறும் கம்பனை விதந்து ஓதியவர்!

‘நடையின் நின்றுயர் நாயகன்’- என்று ராமனை அவரது கோணத்தில் ஒரு காவியப் பாத்திரமாக மட்டும் பார்த்து – ஆனால் அந்த ராமனின் மேன்மைகளை கம்பன் கழக மேடைகள் தோறும் முழங்கிய அபாரமான பேச்சாளர்!

பாரதியை ‘பார்ப்பனக் கவிஞன்’- என்று திராவிடத் தற்குறிகள் சாதியச் சிமிழுக்குள் அடைத்த போது…

பாரதி போற்றிய சமத்துவ சமூகத்தை…

பாரதி கண்ட புதுமைப் பெண்ணை – “நிமிர்ந்த நல் நடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த நல் ஞானச் செருக்கும்”- இருப்பதால்…

பெண் எக்காலத்திலும் -“செம்மை மாதர் திறம்புவதில்லை”- என முழங்கியவர்!

வானொலி கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பாகவே – “காசிநகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கு ஓர் கருவி செய்வோம்”- என்ற பாரதியின் தீர்க்க தரிசனத்தை மேடை தோறும் முழங்கியவர்!

ALSO READ:  தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

கங்கை காவிரி இணைப்பை பாரதி அன்றே கூறியதை – “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்”- என்ற தீர்க்கதரிசனத்தை வியந்து பாராட்டியவர்!

பாஞ்சாலி செய்யும் சபதத்தின் புதுமையையும்…

பாஞ்சாலி சபதம் சூதாட்டச் சருக்கம் முழுவதும் பகடைகள் உருளுவது போன்ற சப்தத்திலேயே பாரதி அமைத்ததையும்…

இவரது வெண்கலக் குரலில் கேட்க வேண்டும்!

கலைஞரின் ஆட்சிக் காலத்தில் – (1989-91)- தமிழகத்தில் விடுதலைப் புலிகள் தங்குதடையின்றி நடமாடியதால்…

அதன் விளைவாக சென்னையில் பட்டப்பகலில் சகாரியா காலனியில் பத்மநாபாவும் அவரது 14 தோழர்களும் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டனர்!

அப்போது பத்மநாபாவுக்கு நடந்த அனைத்து எதிர்க்கட்சிகளின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி ஆட்சியின் அவலத்தையும், விடுதலைப் புலிகளையும் வறுத்து எடுத்தவர்!

அந்த கம்பீர உரை இன்னமும் பலர் காதுகளில் ரீங்கரிக்கிறது.

பிறகு 1991 தேர்தலில் வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சி வேட்பாளராக (ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி) போட்டியிட்டு…

ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தில் ராஜீவ்காந்திக்கு அருகில் சில அடி தூரத்திலேயே நடந்து வந்ததால் மனித வெடிகுண்டுச் சிதறல்களை உடல் முழுதும் தாங்கி உயிருக்குப் போராடியவர்…

பிறகு கடுமையான உயிர்ப் போராட்டத்தில் பிழைத்து, வட சென்னை MP ஆகவும் வென்று…

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

அந்த நினைவுகளை – “ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள்”- என்று புத்தமாக்கியவர்.

உடலில் துளைத்த சில குண்டுத் துகள்களை அகற்ற முடியாமல் அவற்றுடனேயே வலியைப் பொறுத்து வாழ்ந்தவர்.

காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக வென்று- ராஜீவ் வெடிகுண்டு கொலைக்குப் பின் – நாடாளுமன்றம் சென்றபோது….

எந்தக் காங்கிரஸ்காரரும் அணுகி விசாரிக்காதபோது பாஜக தலைவர் வாஜ்பாய் மட்டுமே கொள்கைகளில் எதிரியாக இருந்தாலும்…

அருகில் வந்து கருணையோடு ஆறுதல் கூறி விசாரித்து நலம் வாழ வாழ்த்தியதை தனது புத்தகத்தில் நேர்மையாகப் பதிவு செய்தவர்!

இனி எங்கு கேட்போம் அந்த வெண்கலக் குரலை?!!

வெண்கல மணியின் நாதத்தில் நீங்கள் படம் பிடித்துக் காட்டிய “நடையின் நின்றுயர் நாயகன்” ராமனையும், தமிழ் எழுத்தில் “அத்தனை எழுத்தையும் ஆயுத எழுத்தாக்கிய”- பாரதியையும் இனி எங்கே கேட்கப் போகிறோம்?

நடிகர் விசு இறந்த போது – “பார்ப்பனப் பாம்பு செத்தது”- என்று எழுதிக் களித்த ‘முற்போக்கு’ கள் சிலரின் கயமைத்தனம் எமக்கு இல்லை!

அப்படி மரணத்திலும் மகிழும் கீழ்த்தரம் எங்களுக்கு இல்லை!

ஈவேராவின் சிந்தனைகளை சிவப்புத் துண்டுக்குக் கீழே சுமந்து – இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படை உட்பட அத்தனையும் எதிர்த்த…

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

பிராமண துவேஷிதான் நீங்கள்!

ஆனால் கல்லூரி மேடையானாலும் – கலை இலக்கியப் பெருமன்ற மேடை ஆனாலும் – கம்பன் கழக மேடை ஆனாலும்…

திராவிட இயக்கத்தவரின் ‘கம்பராமாயண வெறுப்புக்கு’ ம் – பாரதி மீதான திராவிடத்தாரின் காழ்ப்புக்கும்…

உங்கள் ஆசான் ஜீவானந்தம் காட்டிய வழியில்…

தக்க பதிலடி கொடுத்து…

பாரதியையும், கம்பனையும் எங்களைப் போன்ற 1970 – 80 களின் மாணவத் தலைமுறைக்கு அடையாளம் காட்டியவர் நீங்கள்!

உமது நா இன்று அடங்கியது!

ஆனால் அது ஒலித்த தேமதுரத் தமிழோசை என்றும் எமது இதயத்தில் பாரதியாய், கம்பனாய், இளங்கோவாய் ரீங்கரிக்கும்!

சென்று வாருங்கள்….

‘தோழர்’ தா.பாண்டியன்!

(நாங்கள் நம்புகிற) வானுலகில் உங்கள் ஜீவாவுடனும், கம்பனுடனும், பாரதியுடனும் செந்தமிழால் கொஞ்சி மகிழுங்கள்!

கருத்து:  முரளி சீதாராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories