December 6, 2025, 4:54 AM
24.9 C
Chennai

போலீஸிடம் லஞ்சம்.. நகராட்சி உதவியாளர் கைது!

venkatesan - 2025

பெரம்பலூரில் போலீஸ் ஏட்டிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுத்தெருவில் அப்லோசன் என்கிற அப்போ வசித்து வருகிறார். இவர் வருவாய் உதவியாளராக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் வெங்கடேஷ் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்மையில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு வரி செலுத்த சென்றார்.

அப்போது ரூ.15,000 கொடுத்தால் இதற்கான வரியை குறைவாக மதிப்பீடு செய்து வழங்குவதாக அப்லோசன் லஞ்சம் கேட்டுள்ளார்.

வெங்கடேசன் லஞ்சம் கொடுப்பதை விரும்பவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அப்லோசனிடம் ரூ.15,000 ரசாயன பவுடர் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுக்க அறிவுறுத்தினர்.

அதன்படி அவரும் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி மற்றும் காவல்துறையினர் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வெங்கடேசன் லஞ்ச பணத்தை நகராட்சி வருவாய் உதவியாளர் அப்லோசனிடம் கொடுத்தார். அதனை மறைந்திருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரிடம் லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ. 15 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அப்லோசனுடைய வீட்டிலும் சோதனை ஏற்றதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories