போலீஸிடம் லஞ்சம்.. நகராட்சி உதவியாளர் கைது!

venkatesan - 2026

பெரம்பலூரில் போலீஸ் ஏட்டிடம் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுத்தெருவில் அப்லோசன் என்கிற அப்போ வசித்து வருகிறார். இவர் வருவாய் உதவியாளராக பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார்.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் வெங்கடேஷ் என்பவர் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்மையில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு வரி செலுத்த சென்றார்.

அப்போது ரூ.15,000 கொடுத்தால் இதற்கான வரியை குறைவாக மதிப்பீடு செய்து வழங்குவதாக அப்லோசன் லஞ்சம் கேட்டுள்ளார்.

வெங்கடேசன் லஞ்சம் கொடுப்பதை விரும்பவில்லை. இதனால் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அப்லோசனிடம் ரூ.15,000 ரசாயன பவுடர் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கொடுக்க அறிவுறுத்தினர்.

அதன்படி அவரும் பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுலோச்சனா, ரத்தினவள்ளி மற்றும் காவல்துறையினர் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

அப்போது வெங்கடேசன் லஞ்ச பணத்தை நகராட்சி வருவாய் உதவியாளர் அப்லோசனிடம் கொடுத்தார். அதனை மறைந்திருந்து பார்த்த லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரிடம் லஞ்சமாக கொடுக்கப்பட்ட ரூ. 15 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் பின்னர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் அப்லோசனுடைய வீட்டிலும் சோதனை ஏற்றதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories