February 20, 2026, 7:14 PM
29.3 C
Chennai

கோவில்களில் போஸ்டர் ஒட்டினால் தான் இயேசுவுக்கு காப்பாற்ற சக்தி கிடைக்கும் போல!

temple - 2026

தமிழக கோவில்களை அரசு கட்டுப்பாட்டில் இருந்து நீக்க தொடங்கப்பட்ட போராட்டமும் பிரச்சாரமும் தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் “இயேசுவே தமிழகத்தை ஆசீர்வதியும்” என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டது‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்-திமுக ஆட்சிக் காலத்தில் குறிப்பாக சுனாமிக்குப் பின்னர் கடலோர மாவட்டங்களும், சிறிது சிறிதாக உட்பகுதி மாவட்டங்களும் மிஷனரிகளின் பிடியின் கீழ் வந்தது அனைவரும் அறிந்த ரகசியம். அப்போதிருந்து தமிழகத்தில் மிஷனரிகளின் ஆட்டம் அதிகரித்து தான் காணப்படுகிறது.

வேண்டுமென்றே கோவிலுக்கு முன் பிட் நோட்டீஸ் வழங்கி “இயேசு ஒருவரே கடவுள்” என்று மதப் பிரச்சாரம் செய்வது, கோவில்களுக்கு அருகே உள்ள தீர்த்தங்களில் ஞானஸ்நானம் செய்து மதம் மாற்றுவது, கோவில் கல்வெட்டுகளில் மத மாற்ற பிரச்சார நோட்டீஸ் ஒட்டுவது என்று இந்துக்களை சீண்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

ஆண்டுக்கு ₹2000 கோடி என்ற அளவில் தமிழகத்தில் உள்ள NGOக்கள் மட்டுமே‌ வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மிஷனரி அமைப்புக்கள் அல்லது சமூக சேவை என்ற‌பெயரில் அவற்றுக்கு உதவும் மறைமுக மிஷனரி அமைப்புகளாக உள்ளன.

கோவில் அடிமை நிறுத்து பிரச்சாரத்தில் ஏற்கனவே கிரிப்டோ கிறிஸ்டியன் எனப்படுபவர்கள் “கோவில்கள் தமிழருக்கு சொந்தம்” என்ற கருத்தைப் பரப்பி வரும் நிலையில் “இயேசுவே தமிழகத்தை ஆசீர்வதியும்” என்ற போஸ்டர்கள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தென்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களிலும் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது இந்துக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது இந்து மக்கள் கட்சியின் கவனத்துக்கு சென்ற நிலையில் “கோயில் சுவற்றில் மற்றும் அருகில் ஒட்டியுள்ள மத சார்புடைய சுவரொட்டிகள் அகற்றப்படவில்லை எனில், இந்து மக்கள் கட்சி சார்பாக அனைத்து மத தலங்களில் சுவர்களிலும் தாய் மதம் திரும்பு சகோதரா உன் மனம் மாற்றத்தை விரும்பும் ஈஸ்வரன் என்று பதிலுக்கு ஒட்டப்படும்.” என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்து விடும் என்ற தைரியத்திலும் மிதப்பிலும் மிஷனரி அமைப்புகள் மீண்டும் தங்கள் கொட்டத்தை ஆரம்பித்து விட்டனவோ என்ற அச்சத்தையும் இந்த போஸ்டர்கள் ஏற்படுத்தி உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories