மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு! அநியாயமாய் போன பேராசிரியை உயிர்!

indrani - 2026

குஜராத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பேராசிரியர் ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வரவில்லை எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இதனால் அலைக்கழிக்கப்பட்ட பேராசிரியர் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

குஜராத்தில் உள்ள மத்திய பல்கலையில் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸ் துறையின் பேராசிரியராக பணிபுரிபவர் இந்திராணி பானர்ஜி. இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.,2) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால், அவரது மாணவர்கள் காந்திநகரில் உள்ள ஒரு சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரது ஆக்ஸிஜன் செறிவு நிலை 90 முதல் 92 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் சிவில் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி இருந்ததால், அவரை வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதனால், அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு போதிய ஆக்ஸிஜன் வசதியும், வென்டிலேட்டர் அளவும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். அதற்குள்ளாக இந்திராணிக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே, ஏப்.,3ம் தேதி மாணவர்கள் தங்கள் தனியார் வாகனத்தில் இந்திராணியை ஏற்றி, ஆமதாபாத்தில் உள்ள மாநகராட்சி கொரோனா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், ஈ.எம்.ஆர்.ஐ., மற்றும் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்படாததால், மருத்துவமனையில் அவரை அனுமதிக்க மறுத்தனர்.நிலைமை மோசமடையவே, மீண்டும் காந்திநகர் மருத்துவமனைக்கே கொண்டு சென்றனர்.

அந்த நேரத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. அதிகாலை 2 மணியளவில் அவருக்கு ஆக்ஸிஜன் இயந்திரத்தை மருத்துவமனை பொருத்தியது. ஆனால், இவ்வளவு அலைக்கழிப்பினாலும், தாமதமான சிகிச்சையினாலும், இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வளவு முயன்றும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையின் அலட்சியம் போன்ற பல காரணங்களால் இந்திராணி பானர்ஜி உயிரிழந்தது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories