மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு! அநியாயமாய் போன பேராசிரியை உயிர்!

indrani - 2026

குஜராத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பேராசிரியர் ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வரவில்லை எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இதனால் அலைக்கழிக்கப்பட்ட பேராசிரியர் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

குஜராத்தில் உள்ள மத்திய பல்கலையில் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸ் துறையின் பேராசிரியராக பணிபுரிபவர் இந்திராணி பானர்ஜி. இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.,2) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால், அவரது மாணவர்கள் காந்திநகரில் உள்ள ஒரு சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரது ஆக்ஸிஜன் செறிவு நிலை 90 முதல் 92 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் சிவில் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி இருந்ததால், அவரை வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதனால், அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு போதிய ஆக்ஸிஜன் வசதியும், வென்டிலேட்டர் அளவும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். அதற்குள்ளாக இந்திராணிக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே, ஏப்.,3ம் தேதி மாணவர்கள் தங்கள் தனியார் வாகனத்தில் இந்திராணியை ஏற்றி, ஆமதாபாத்தில் உள்ள மாநகராட்சி கொரோனா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

ஆனால், ஈ.எம்.ஆர்.ஐ., மற்றும் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்படாததால், மருத்துவமனையில் அவரை அனுமதிக்க மறுத்தனர்.நிலைமை மோசமடையவே, மீண்டும் காந்திநகர் மருத்துவமனைக்கே கொண்டு சென்றனர்.

அந்த நேரத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. அதிகாலை 2 மணியளவில் அவருக்கு ஆக்ஸிஜன் இயந்திரத்தை மருத்துவமனை பொருத்தியது. ஆனால், இவ்வளவு அலைக்கழிப்பினாலும், தாமதமான சிகிச்சையினாலும், இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வளவு முயன்றும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையின் அலட்சியம் போன்ற பல காரணங்களால் இந்திராணி பானர்ஜி உயிரிழந்தது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Topics

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

Entertainment News

Popular Categories