December 5, 2025, 3:44 PM
27.9 C
Chennai

மருத்துவமனைகளின் அலட்சியம், அலைக்கழிப்பு! அநியாயமாய் போன பேராசிரியை உயிர்!

indrani - 2025

குஜராத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட பேராசிரியர் ஒருவரை ஆம்புலன்சில் அழைத்து வரவில்லை எனக்கூறி மருத்துவமனை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இதனால் அலைக்கழிக்கப்பட்ட பேராசிரியர் போதிய ஆக்ஸிஜன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.

குஜராத்தில் உள்ள மத்திய பல்கலையில் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸ் துறையின் பேராசிரியராக பணிபுரிபவர் இந்திராணி பானர்ஜி. இவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்.,2) திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால், அவரது மாணவர்கள் காந்திநகரில் உள்ள ஒரு சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவரது ஆக்ஸிஜன் செறிவு நிலை 90 முதல் 92 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் சிவில் மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாமல் முழுவதுமாக நிரம்பி இருந்ததால், அவரை வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கும்படி ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதனால், அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், அங்கு போதிய ஆக்ஸிஜன் வசதியும், வென்டிலேட்டர் அளவும் குறைவாக இருப்பதாக கூறியுள்ளனர். அதற்குள்ளாக இந்திராணிக்கு மூச்சுத்திணறல் அதிகமாகவே, ஏப்.,3ம் தேதி மாணவர்கள் தங்கள் தனியார் வாகனத்தில் இந்திராணியை ஏற்றி, ஆமதாபாத்தில் உள்ள மாநகராட்சி கொரோனா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், ஈ.எம்.ஆர்.ஐ., மற்றும் 108 ஆம்புலன்சில் கொண்டு வரப்படாததால், மருத்துவமனையில் அவரை அனுமதிக்க மறுத்தனர்.நிலைமை மோசமடையவே, மீண்டும் காந்திநகர் மருத்துவமனைக்கே கொண்டு சென்றனர்.

அந்த நேரத்தில் அவரது ஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான நிலையில் 60 சதவீதமாக குறைந்தது. அதிகாலை 2 மணியளவில் அவருக்கு ஆக்ஸிஜன் இயந்திரத்தை மருத்துவமனை பொருத்தியது. ஆனால், இவ்வளவு அலைக்கழிப்பினாலும், தாமதமான சிகிச்சையினாலும், இந்திராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்வளவு முயன்றும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, மருத்துவமனையின் அலட்சியம் போன்ற பல காரணங்களால் இந்திராணி பானர்ஜி உயிரிழந்தது மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories