பழக்கடையில் கள்ள நோட்டு கொடுக்க முயன்ற இரு பெண்கள் கைது!

fruitstall
fruitstall

கள்ளநோட்டுகளை பழக்கடையில் மாற்ற முயன்ற போது இரண்டு பெண்கள் கையும் களவுமாக சிக்கியுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கமலாபுரம் பகுதியில் சந்தனமேரி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நான்கு வழி சாலையில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருடைய கடைக்கு பழம் வாங்குவதற்கு இரண்டு பெண்கள் வந்துள்ளனர். அப்போது அவர்கள் சில பழங்களை வாங்கி விட்டு 500 ரூபாய் கள்ளநோட்டை சந்தனமேரியிடம் கொடுத்துள்ளனர்.

fack mony2
fack mony2

அந்த நோட்டை பார்த்தபோது அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதுகுறித்துக் அவர்களிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த இரண்டு பெண்களையும் சந்தனமேரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மடக்கி பிடித்துள்ளார்.

பின்னர் அவர்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அங்கு அந்த இரண்டு பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

fack mony
fack mony

அவர்கள் நடத்திய விசாரணையில் அவர்கள் கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 30ம், 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 3 ம் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் திண்டுக்கல்லை சேர்ந்த சக்தி சூர்யா மற்றும் நாகரத்தினம் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories