கொஞ்சம் கொஞ்சமாக முடக்குவோம்: ஷாக் கொடுக்கும் வாட்ஸ்அப்!

whatsapp
whatsapp

புதிய தனியுரிமை கொள்கையை ஏற்காத பயனாளிகள் வாட்ஸ் அப் (கட்செவி அஞ்சல்) செயலியை முழுமையாக பயன்படுத்த முடியாது என்று அந்தச் செயலி தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான அந்தச் செயலியின் வலைதளத்தில் இதுதொடா்பாக கூறப்பட்டுள்ளதாவது:

புதிய கொள்கையை ஆராய்ந்து ஏற்பதற்கான வாய்ப்பு கிடைக்காத பயனாளிகளுக்கு அதுகுறித்து தொடா்ந்து நினைவூட்டல் அனுப்பப்பட்டு வருகிறது. சில வாரங்களுக்குப் பின்னா் அந்த நினைவூட்டல் செயலியில் நிரந்தரமாக தென்படும். அதன் பின்னா் புதிய கொள்கையை ஏற்கும் வரை பயனாளிகளுக்கு சேவைகள் குறைக்கப்படும்.

whatsapp2
whatsapp2

அனைத்து பயனாளிகளுக்கும் ஒரே நேரத்தில் சேவைகள் குறைக்கப்படாது.
முதலில் அவா்களால் செயலியில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியாது. ஆனால் வெளியில் இருந்து வரும் அழைப்புகள், காணொலி அழைப்புகளுக்கு பதிலளிக்க முடியும்.

ஏதேனும் அறிவிப்புகள் வந்தால் அவற்றைத் திறந்து படிக்க முடியும். இதுதவிர குறுந்தகவல் வந்தால் அதற்குப் பதிலளிக்க முடியும்; வெளியில் இருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க தவறிவிட்டால் திரும்ப அழைக்க முடியும்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

இவ்வாறு சேவைகள் குறைக்கப்பட்ட சில வாரங்கள் கழித்தும் புதிய கொள்கையை பயனாளிகள் ஏற்காவிட்டால் வெளியில் இருந்து வரும் அழைப்புகள், அறிவிப்புகள், குறுந்தகவல்களும் நிறுத்தப்படும். எனினும் புதிய கொள்கையை ஏற்காத பயனாளிகளின் கணக்குகள் நீக்கப்படாது.

இந்தக் கொள்கைகள் வாட்ஸ்அப் செயலியைப் பதிவிறக்கம் செய்தும் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கும் பயனாளிகளுக்கும் பொருந்தும் (பொதுவாக செயல்படாமல் உள்ள வாட்ஸ் அப் கணக்குகள் 120 நாள்களுக்கு பின்னா் நீக்கப்படும்) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கை குறித்து சில வாரங்களுக்கு நினைவூட்டல் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ள வாட்ஸ் அப் செயலி, அந்த நினைவூட்டல் எத்தனை நாள்களுக்கு அனுப்பப்படும் என்பதைக் குறிப்பிடவில்லை.

whatsapp
whatsapp

இதுதொடா்பாக அந்தச் செயலியின் செய்தித்தொடா்பாளா் கூறுகையில், உலகம் முழுவதும் உள்ள வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு புதிய கொள்கை குறித்து பல மாதங்களாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான பயனாளிகள் புதிய கொள்கையை ஏற்றுக் கொண்டனர். அதைச் செய்ய முடியாதவா்களின் கணக்குகள் மே 15-ஆம் தேதி நீக்கப்படாது; சேவைகளும் நிறுத்தப்படாது என்று தெரிவித்தார்.

ALSO READ:  இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கையின்படி அந்தச் செயலியை பயன்படுத்தும் பயனாளிகளின் தகவல்களை வணிக நோக்கில் தனது தாய் நிறுவனமான ஃபேஸ்புக்கிடம் பகிர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்குப் பயனாளிகளிடம் இருந்து பலத்த எதிா்ப்பு எழுந்தது. எனினும் புதிய கொள்கையை பயனாளிகள் ஏற்பதற்கு கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி வரை அந்தச் செயலி கால வரம்பு நிா்ணயித்தது. பின்னா் அதனை மே 15 வரை நீட்டித்தது. தற்போது அந்த கால வரம்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தற்போது அறிவித்துள்ளது.

மத்திய அரசு தரவுகளின்படி நாட்டில் 53 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்தச் செயலியின் மிகப் பெரிய சந்தையாக இந்தியா திகழ்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories