மும்பை: வண்ணங்களின் பண்டிகை என்று போற்றப்படும் ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, மக்கள் தங்கள் வழக்கமான பணிகளில் இருந்து விலகி, பண்டிகைக் கொண்டாட்ட உற்சாகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வழக்கமான விடுமுறை தினமானதால், இன்று பங்குச் சந்தைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மார்ச் 5 நேற்றைய வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 29,448.95 புள்ளிகளிலும்,தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 8,937.75 புள்ளிகளிலும் இருந்தது.

