மர்ம நபர்கள் தன்னை கட்டிப் போட்டு நகை திருடிச் சென்றதாக நாடகமாடிய பெண்!

drama-theft சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் புகுந்து தன்னை கட்டிப்போட்டு நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்து நாடகம் ஆடியவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து குமரன் நகர் போலீஸார் தெரிவித்தது…. குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யங்கார் தெருவில் வசித்து வரும் சபீதா (35) (கணவர் பெயர்: சுரேஷ்) என்ற பெண்மணி நேற்று (05,03,15) மாலை குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில். இன்று நண்பகல் அடையாளம் தெரியாத 2 நபர்கள் எனது வீட்டிற்குள் புகுந்து என்னை கட்டிப் போட்டுவிட்டு. வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000-ஐ திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்ததன் பேரில் குமரன் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதில் நகை திருட்டு சம்பவம் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தால், சபீதாவை விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், சபீதாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சபீதாவே அந்த நகைகளை அடகு வைத்திருப்பதையும், பணத்தை எடுத்து வைத்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், தீவிரமாக விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் சபீதாவின் தந்தை ரவிக்குமார் ரெட்டி என்பவர் வீடு கட்டி வருவதால், அதற்கு பணம் தேவைப்படுவதாக தந்தை கூறியதன் பேரில், 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000 ஐ சபீதாவே எடுத்துக் கொண்டு, நகைகளை அடகுக் கடையில் வைத்துக் கிடைத்த பணம் ரூ.4 லட்சத்தையும் தந்தையிடம் கொடுத்துள்ளார். பின்னர், மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார். இது குறித்து சபீதாவிடம் குமரன் நகர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories