February 24, 2026, 6:50 AM
25 C
Chennai

மர்ம நபர்கள் தன்னை கட்டிப் போட்டு நகை திருடிச் சென்றதாக நாடகமாடிய பெண்!

drama-theft சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் புகுந்து தன்னை கட்டிப்போட்டு நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்து நாடகம் ஆடியவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து குமரன் நகர் போலீஸார் தெரிவித்தது…. குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யங்கார் தெருவில் வசித்து வரும் சபீதா (35) (கணவர் பெயர்: சுரேஷ்) என்ற பெண்மணி நேற்று (05,03,15) மாலை குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில். இன்று நண்பகல் அடையாளம் தெரியாத 2 நபர்கள் எனது வீட்டிற்குள் புகுந்து என்னை கட்டிப் போட்டுவிட்டு. வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000-ஐ திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்ததன் பேரில் குமரன் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதில் நகை திருட்டு சம்பவம் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தால், சபீதாவை விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், சபீதாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சபீதாவே அந்த நகைகளை அடகு வைத்திருப்பதையும், பணத்தை எடுத்து வைத்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், தீவிரமாக விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் சபீதாவின் தந்தை ரவிக்குமார் ரெட்டி என்பவர் வீடு கட்டி வருவதால், அதற்கு பணம் தேவைப்படுவதாக தந்தை கூறியதன் பேரில், 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000 ஐ சபீதாவே எடுத்துக் கொண்டு, நகைகளை அடகுக் கடையில் வைத்துக் கிடைத்த பணம் ரூ.4 லட்சத்தையும் தந்தையிடம் கொடுத்துள்ளார். பின்னர், மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார். இது குறித்து சபீதாவிடம் குமரன் நகர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Entertainment News

Popular Categories