மர்ம நபர்கள் தன்னை கட்டிப் போட்டு நகை திருடிச் சென்றதாக நாடகமாடிய பெண்!

drama-theft சென்னை: சென்னை மேற்கு மாம்பலத்தில் வீட்டில் புகுந்து தன்னை கட்டிப்போட்டு நகைகளை திருடிச் சென்றதாக புகார் அளித்து நாடகம் ஆடியவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து குமரன் நகர் போலீஸார் தெரிவித்தது…. குமரன் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு மாம்பலம் சீனிவாச அய்யங்கார் தெருவில் வசித்து வரும் சபீதா (35) (கணவர் பெயர்: சுரேஷ்) என்ற பெண்மணி நேற்று (05,03,15) மாலை குமரன் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரில். இன்று நண்பகல் அடையாளம் தெரியாத 2 நபர்கள் எனது வீட்டிற்குள் புகுந்து என்னை கட்டிப் போட்டுவிட்டு. வீட்டிலிருந்த 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000-ஐ திருடிச் சென்றுவிட்டதாக தெரிவித்ததன் பேரில் குமரன் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதில் நகை திருட்டு சம்பவம் நடந்ததற்கான அறிகுறி எதுவும் இல்லாத காரணத்தால், சபீதாவை விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாகக் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார், சபீதாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சபீதாவே அந்த நகைகளை அடகு வைத்திருப்பதையும், பணத்தை எடுத்து வைத்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், தீவிரமாக விசாரித்ததில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் சபீதாவின் தந்தை ரவிக்குமார் ரெட்டி என்பவர் வீடு கட்டி வருவதால், அதற்கு பணம் தேவைப்படுவதாக தந்தை கூறியதன் பேரில், 36 சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10.000 ஐ சபீதாவே எடுத்துக் கொண்டு, நகைகளை அடகுக் கடையில் வைத்துக் கிடைத்த பணம் ரூ.4 லட்சத்தையும் தந்தையிடம் கொடுத்துள்ளார். பின்னர், மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்றுவிட்டதாக நாடகமாடியுள்ளார். இது குறித்து சபீதாவிடம் குமரன் நகர் காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories