December 6, 2025, 1:21 AM
26 C
Chennai

கைதாகி ஜாமீனில் இருந்த சாப்பாடு இராமன் மருத்துவமனையில் அனுமதி!

porchezhiyan
porchezhiyan

யூடியூப் சேனல் பிரபலம் சாப்பாட்டு ராமன், கீழ்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுக்கப்பட்ட அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொற்செழியன். இவர் சித்த மருத்துவம் படித்தவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்பன் என்ற பெயரில் சொந்த ஊரில் கிளினிக் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ‘சாப்பாட்டு ராமன்’ என்ற பெயரில் ஒரு யூ ட்யூப் இணைய சேனல்- ஐ உருவாக்கி அதில் இவர் சாப்பாடு வரும் அழகை பார்த்து இவருக்கு யூட்யூபில் வரவேற்பு அதிகமானது.

chapatu raman 1
chapatu raman 1

3 கிலோ மஸ்ரூம் பிரியாணி, முழு கிடா விருந்து, 9 பிளேட் சாப்பாடு மற்றும் பீஷ் கிரேவி, அஞ்சு கிலோ மட்டன் பிரியாணி என்று பலரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு அதிக உணவுகளை கை நிறைய அள்ளி அள்ளி சாப்பிட்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தார். அதனால் அவர் சாப்பாட்டு ராமன் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

இப்படி அதிகமான உணவுகளை அவர் சாப்பிடுவதற்கும், சித்த மருத்துவம் படித்தவர் என்பதால் அது ஜீரணமாவதற்கு சில மருந்துகளை சாப்பிடுவதாகவும் அதை பயனர்களுக்கும் தெரிவித்து டிப்ஸ் கொடுத்து வந்தார். இதனால் சாப்பாட்டு ராமனுக்கு வரவேற்பு அதிகமாகிக்கொண்டே இருந்தது.

இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் பீதியில் இருப்போருக்கு சில ஆங்கில மருந்துகளை சொல்லி அவற்றை சாப்பிட சொன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றிருக்கிறது.

porchezhiyan 1
porchezhiyan 1

இதையடுத்து நேற்று அவரது கிளினிக்கில் சோதனை நடத்திய போது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆங்கில மாத்திரைகளை பறிமுதல் செய்து சாப்பாட்டு ராமன் கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.

இதன்பின்னர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சாப்பாட்டு ராமன் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு நீதிமன்ற விசாரணையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

chapatu raman
chapatu raman

இதையடுத்து அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் இன்னும் தெரியவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

மேலும் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories