April 26, 2025, 11:09 AM
33.1 C
Chennai

கைதாகி ஜாமீனில் இருந்த சாப்பாடு இராமன் மருத்துவமனையில் அனுமதி!

porchezhiyan
porchezhiyan

யூடியூப் சேனல் பிரபலம் சாப்பாட்டு ராமன், கீழ்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுக்கப்பட்ட அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கூகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொற்செழியன். இவர் சித்த மருத்துவம் படித்தவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஐயப்பன் என்ற பெயரில் சொந்த ஊரில் கிளினிக் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் ‘சாப்பாட்டு ராமன்’ என்ற பெயரில் ஒரு யூ ட்யூப் இணைய சேனல்- ஐ உருவாக்கி அதில் இவர் சாப்பாடு வரும் அழகை பார்த்து இவருக்கு யூட்யூபில் வரவேற்பு அதிகமானது.

chapatu raman 1
chapatu raman 1

3 கிலோ மஸ்ரூம் பிரியாணி, முழு கிடா விருந்து, 9 பிளேட் சாப்பாடு மற்றும் பீஷ் கிரேவி, அஞ்சு கிலோ மட்டன் பிரியாணி என்று பலரும் அதிசயித்துப் போகும் அளவிற்கு அதிக உணவுகளை கை நிறைய அள்ளி அள்ளி சாப்பிட்டு பார்வையாளர்களை கவர்ந்து வந்தார். அதனால் அவர் சாப்பாட்டு ராமன் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

இப்படி அதிகமான உணவுகளை அவர் சாப்பிடுவதற்கும், சித்த மருத்துவம் படித்தவர் என்பதால் அது ஜீரணமாவதற்கு சில மருந்துகளை சாப்பிடுவதாகவும் அதை பயனர்களுக்கும் தெரிவித்து டிப்ஸ் கொடுத்து வந்தார். இதனால் சாப்பாட்டு ராமனுக்கு வரவேற்பு அதிகமாகிக்கொண்டே இருந்தது.

ALSO READ:  IPL 2025: 18 ஆண்டுகளில் பெங்களூரு பெற்ற முதல் வெற்றி

இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலையின் பீதியில் இருப்போருக்கு சில ஆங்கில மருந்துகளை சொல்லி அவற்றை சாப்பிட சொன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றிருக்கிறது.

porchezhiyan 1
porchezhiyan 1

இதையடுத்து நேற்று அவரது கிளினிக்கில் சோதனை நடத்திய போது சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆங்கில மாத்திரைகளை பறிமுதல் செய்து சாப்பாட்டு ராமன் கிளினிக்கிற்கு சீல் வைத்தனர்.

இதன்பின்னர் கீழ்குப்பம் காவல் நிலையத்தில் சுகாதாரத்துறையினர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் சாப்பாட்டு ராமன் கைது செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அங்கு நீதிமன்ற விசாரணையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமையில் இருந்துள்ளார் என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

chapatu raman
chapatu raman

இதையடுத்து அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முடிவுகள் இன்னும் தெரியவில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

மேலும் அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்படி அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ:  சாம்பியன்ஸ் ட்ராபி: கில் ஆட்டத்தால் இந்திய அணி ‘தில்’ வெற்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories