வீட்டிற்குள் நுழைந்த 5 அடி பாம்பு! அறியாத குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published:

snake
snake

வீட்டிற்குள் நுழைந்த 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்து தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள கந்தம்பட்டி பகுதியில் செல்லத்துரை என்பவர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது வீட்டிற்குள் யாரும் கண்டுகொள்ளாத நேரத்தில் ஐந்தடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று நுழைந்து ஒளிந்திருக்கிறது. இதனையடுத்து செல்லதுரையின் குடும்பத்தினர் எதார்த்தமாக பாம்பைப் பார்த்துள்ளனர்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை பிடித்துவிட்டனர். பின்பு வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்துக் கொண்டு அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Related articles

Recent articles

spot_img