மதுரையில் அவசர கால ஊர்தியில் குழந்தை பிறந்த சம்பவம் உறவினர்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு ஒரு பெண்ணை பிரசவத்துக்காக அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் 108 -ஆம்புலன்சில் வைத்து அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.
108-ல் பணியாற்றிய அவசர மருத்துவ உதவியாளர்
வி.லோகமணி, அந்தப் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார். தாயும் சேயும் நலமாக உள்ளனர் என்றும், பின்னர் குழந்தையும், தாயும் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.