3 மாதத்துக்குள்… மின் மிகை மாநிலம் டூ மின் தட்டுப்பாடு மாநிலம்! எப்படி? அண்ணாமலை கேள்வி!

annamalai karur - 2026

மின் மிகை மாநிலம் மற்றும் மின் உபரி மாநிலமாம் தமிழகத்தில், திமுக ஆட்சி அமைத்த மூன்று மாதத்திற்குள் மின் தட்டுப்பாடு எவ்வாறு ஏற்பட்டது என கரூரில் பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு 2006 – 11 அதிகமாக மின்வெட்டு இருந்து. பின்பு 2011 முதல் 2021 வரை மின் உபரியாக இருந்த மாநிலம் இப்போது மின் தட்டுப்பாடு புதிதாக திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்திற்குள் எவ்வாறு ஏற்பட்டது என கரூரில் பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

கரூரில் பாஜக கட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் முதல்கட்டமாக கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியைச் சார்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற நிவாரண வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாவட்ட தலைவர் சிவசாமி முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது… தமிழ்நாட்டில், 2006 – 11 காலத்தில் அதிகமாக மின்வெட்டு, அதுவும் இந்தியாவிலேயே அதிக அளவில் மின்வெட்டு மாநிலமாக இருந்து. 2011 முதல் 2021 வரை பின்பு மின் உபரி மாநிலமாக இருந்து மற்ற மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எப்படி திமுக ஆட்சி அமைத்த இரண்டு மூன்று மாதத்தில் மின்தடை மாநிலமாக தமிழகம் மாறியது? காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது… மூன்று மாதத்திற்குள் மின் தடை ஏற்படுவது என்பது ஏற்புடையதல்ல!

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

அதிலும் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுவது என்னவென்றால், அணில் டிரான்ஸ்பார்மர் மீது ஏறி அதன் மீது ஏறி அதன் மீது பொருத்தப்பட்டுள்ள பீங்கான் போன்றவைகளை கடித்ததன் காரணமாக மின் தடை ஏற்படுவதாக தெரிவித்திருந்தார்.

அணில் இந்தியா உருவான காலத்திலிருந்தே இருந்து வருகிறது, தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அணில் வரவில்லை! 2011 முதல் 2021 வரை அணில் இருந்தது. அப்போது ஏற்படாத மின்தடை இப்பொழுது எப்படி திமுக ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்திற்குள் ஏற்பட்டுள்ளது?

அமைச்சர் பொறுப்பேற்றதற்கு பிறகு, செந்தில் பாலாஜி மின் துறையில் பணியாற்றும் பொறியாளர்களை மாற்றி விட்டதாகவும், அரசியலுக்காக யாரோ சுவிட்சை ஆப் செய்து ஆன் செய்துவிடுகிறார்கள் என்ற வாதமும் ஏற்புடையதல்ல! நிச்சயமாக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அதே போன்று தொழிற்சாலைகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் தொழிற்சாலைகளில் யுபிஎஸ் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது! மின் தடை ஏற்படுவதை குறை சொல்லவில்லை; ஆட்சிக்கு வந்த பிறகு ஆறு மாத காலம் அவகாசம் கொடுத்து பார்க்கவேண்டும்! அவர்கள் சொல்லும் காரணத்தைக் குறை சொல்கிறேன்!

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

இதுபோன்ற அணில் வருவதாக காரணம் சொல்ல வேண்டாம்! அடுத்த 5 ஆண்டுகளுக்கும் அணில் ஏறுமா? அப்படி அணில் ஏறினால் அதைப் பிடிப்பதற்கு புதிய துறை உருவாக்கப் படுமா? உண்மையான காரணத்தை ஆராய்ச்சி செய்து மின்வெட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மின்துறை மூலமாக பராமரிப்பு பணிகளுக்காக மின் கம்பிகளுக்கு மேலே வளர்ந்து இருக்கும் மரக்கிளைகளை வெட்டுவது வழக்கமான ஒன்று. ஆனால் இதை ஒரு காரணமாக பயன்படுத்தி பல ஆண்டுகளாக வளர்ந்து இருக்கும் மரங்களை வெட்டுவதை தவிர்த்துவிட்டு 24 மணி நேரமும் மின்சாரம்… மின்சாரம் தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை!

உள்ளாட்சி தேர்தலில் நிறைய இடங்களில் நின்று வெற்றி பெறுவோம்! கூட்டணி கட்சியில் இருப்பதால் நாங்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் பாஜக குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் திமுக விதைத்து இருக்கின்றது. நாங்கள் கொள்கைகளை மாற்றி பேச மாட்டோம்… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories