சென்னை: மாட்டிறைச்சிக்கு இடைக்கால அனுமதி அளித்து மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு தெரிவிப்பதாக அதன் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை : ஒடுக்கப்பட்ட மக்களின் சத்துணவான மாட்டு இறைச்சிக்கு மராட்டிய மாநில அரசு விதித்துள்ள தடை நாடெங்கும் உள்ள மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பா.ஜ.க. அரசின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போர்ப் பிரகடனமாகவே பார்க்க வேண்டியுள்ள சூழலில் மராட்டிய மாநில உயர்நீதிமன்றம் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்து இடைக்கால அனுமதிக்கு உத்திரவிட்டதை வரவேற்கிறோம். மகாராஷ்டிராவில் இறைச்சிக்காக மாடு மற்றும் எருதுகள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என கோரி பாரதிய கோவனிஷ் ரக்சன் சன்ரக்சன் பரிசத் என்ற அமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில். அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இறைச்சிக்காக மாடு மற்றும் எருதுகள் வெட்டப்படுவதை உடனடியாக தடுக்கும்படி உத்திரவிட்டது. மாட்டு இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மும்பை புறநகர் மாட்டிறைச்சி விற்பனையாளர் நல சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்ற நீதிபதிகள் ‘அரசுக்காக தனிமனிதரின் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. எனவே ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவை அமல்படுத்த தடைவிதித்து, வியாபாரிகள் தங்களிடம் ஏற்கனவே உள்ள மாடுகளை வெட்ட இடைக்கால அனுமதி அளிக்கப்படுகிறது’ என உத்தரவில் குறிப்பிட்டனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை வரவேற்கிறோம். இடைக்கால உத்தரவு, நிரந்தர உத்தரவாக மாறவேண்டும். இந்தியாவின் பெரும்பாலான மக்களின் உணவு உரிமைக்கு அரசுகளும், நீதித்துறையும் உத்திரவாதம் வழங்கவேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.
Hot this week
அரசியல்
இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
நெல்லை
தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன்
₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

Topics
அரசியல்
இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!
துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?
நெல்லை
தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!
தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
சற்றுமுன்
நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சற்றுமுன்
₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிகக் கட்டுரைகள்
அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!
இன்று ஸ்ரீ ராம நவமி
ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்….
ஜெய் ஸ்ரீ ராம்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
இந்தியா
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

