‎மாட்டிறைச்சிக்கு அனுமதி‬: மும்பை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு

சென்னை: மாட்டிறைச்சிக்கு இடைக்கால அனுமதி அளித்து மும்பை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு தமுமுக வரவேற்பு தெரிவிப்பதாக அதன் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை : ஒடுக்கப்பட்ட மக்களின் சத்துணவான மாட்டு இறைச்சிக்கு மராட்டிய மாநில அரசு விதித்துள்ள தடை நாடெங்கும் உள்ள மக்களிடையே கடும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பா.ஜ.க. அரசின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான போர்ப் பிரகடனமாகவே பார்க்க வேண்டியுள்ள சூழலில் மராட்டிய மாநில உயர்நீதிமன்றம் மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்து இடைக்கால அனுமதிக்கு உத்திரவிட்டதை வரவேற்கிறோம். மகாராஷ்டிராவில் இறைச்சிக்காக மாடு மற்றும் எருதுகள் வெட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என கோரி பாரதிய கோவனிஷ் ரக்சன் சன்ரக்சன் பரிசத் என்ற அமைப்பு மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில். அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், இறைச்சிக்காக மாடு மற்றும் எருதுகள் வெட்டப்படுவதை உடனடியாக தடுக்கும்படி உத்திரவிட்டது. மாட்டு இறைச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மும்பை புறநகர் மாட்டிறைச்சி விற்பனையாளர் நல சங்கம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை ஏற்ற நீதிபதிகள் ‘அரசுக்காக தனிமனிதரின் சுதந்திரத்தைப் பறிக்க முடியாது. எனவே ஏற்கனவே பிறப்பித்த தடை உத்தரவை அமல்படுத்த தடைவிதித்து, வியாபாரிகள் தங்களிடம் ஏற்கனவே உள்ள மாடுகளை வெட்ட இடைக்கால அனுமதி அளிக்கப்படுகிறது’ என உத்தரவில் குறிப்பிட்டனர். மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை வரவேற்கிறோம். இடைக்கால உத்தரவு, நிரந்தர உத்தரவாக மாறவேண்டும். இந்தியாவின் பெரும்பாலான மக்களின் உணவு உரிமைக்கு அரசுகளும், நீதித்துறையும் உத்திரவாதம் வழங்கவேண்டும் என்றே வலியுறுத்துகிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories