சுதந்திரம் 75: வீரவாஞ்சி சிலைக்கு பாஜக., இந்து முன்னணி மரியாதை!

Published:

tenkasi hindumunnai - 2026

தென்காசி மாவட்ட இந்து முன்னணி சார்பில் சுதந்திர போராட்ட தியாகி வீர வாஞ்சிநாதனுக்கு மரியாதை செலுத்தும் வகையில், செங்கோட்டை பேருந்து நிலையம் முன்புறம் உள்ள வீர வாஞ்சி சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத்தலைவர் முருகன், செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன், செங்கோட்டை நகர துணைத்தலைவர் முருகன் நகரச் செயலாளர் ராம்குமார் நகர செயலாளர் இசக்கிமுத்து, கற்குடி ஆட்டோ முன்னணி தலைவர் மணி மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

tenkasi hindumunani - 2026

வீரவாஞ்சி சிலைக்கு
பாஜக., மரியாதை!

செங்கோட்டை மேலபஜார் பாஜக அலுவலகம் முன்பு வைத்து நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு நகரத்தலைவா் வேம்புராஜ் தலைமை தாங்கினார். நகரப் பொதுச்செயலாளா்கள் மணிகண்டன், காளி ஆகியோர் முன்னிலை வகித்தனா். நகரத்தலைவா் இராமர் அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடா்ந்து முன்னாள் இராணுவ வீரர் சுபேதார் ரமேஷ் தேசியக்கொடியை ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கினார்.அதனைதொடா்ந்து பேரூந்து நிலையம் அருகில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வீரவாஞ்சிநாதன் முழுஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் . மாவட்டத் தலைவர் ராமராஜா மாநில பொதுக்குழு உறுப்பினர் பாண்டித்துரை மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவான் மாவட்ட செயலாளர் மாரியப்பன் செயலாளர்கள் சந்திரன் கணேசன் சுப்பிரமணியன் விவசாய அணி மாவட்ட அமைப்பு சாரா பிரிவு து.தலைவர் பேச்சிமுத்து நகர துணைத் தலைவர் கோமதி நாயகம் நகர இளைஞர் அணி தலைவர் மாரி பொதுச் செயலாளர் கருப்பசாமி கிளைத் தலைவர் முருகன் நாணய கணேசன் பாலகிருஷ்ணன் சுந்தர்ராஜ் கண்ணன் சுப்பிரமணியன். நகர இந்து முன்னனி தலைவா் மூர்த்தி, மாவட்ட இந்து முன்னனி நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img