baby 1
baby 1

பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் ரயிலிலேயே விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு ஜோலார் பேட்டையிலிருந்து அரக்கோணம் செல்லும் சிறப்பு ரயில் வந்துள்ளது.

அப்போது ரயிலில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சோதனையில் சந்தேகப்படும் விதமாக பயணிகளின் இருக்கைக்கு கீழே கட்டை பை ஒன்று இருந்தது. எனவே காவல்துறையினர் அதனை எடுத்து பார்த்துள்ளனர்.

அந்த பையில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

அதன் பின் ரயில் நிலையத்திற்கு கொண்டு சென்று மருத்துவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மருத்துவர் குழந்தையை சோதனை செய்து நலமுடன் இருப்பதாகவும், பிறந்து 3 நாட்களே ஆகி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிகிச்சைக்காக குழந்தையை அருகிலுள்ள வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி காவல்துறையினர் வைத்துள்ளனர்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

இதனை தொடர்ந்து இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை ஓடும் ரயிலில் விட்டுச்சென்ற தாயை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending