நெருப்புடன் கொட்டிய சாம்பலில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு!

Venkatesh
Venkatesh

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்த கந்தசாமி என்ற கூலித்தொழிலாளியின் மகன் வெங்கடேஷ் வயது (14), இந்த சிறுவன் அங்கு உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படாத நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த மாணவனும் ஆன்லைன் வகுப்பு மூலம் படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி ஏமப்பேர் எரிப் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார் இச்சிறுவன். அப்போது அங்கு ஏற்கனவே கொட்டப்பட்ட நெருப்புடன் கலந்த சாம்பலில் சிறுவன் வெங்கடேஷ் கால் வைத்துள்ளார். சுடவே எதிர்பாராத விதமாக தவறி அந்த நெருப்பில் விழுந்துள்ளார். விழுந்து பயங்கர தீ காயம் அடைந்தார் சிறுவன்.

தீக்காயமடைந்த சிறுவன் பிறகு தானே எழுந்து வீட்டிற்கு ஓடி சென்றுள்ளார். அங்கு நடந்த சம்பவத்தை அவர்களுடைய பெற்றோரிடம் கூறியுள்ளார்ன். அதன் பிறகு சிறுவன் வெங்கடேஷை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்,

அதன் பின்னர் அங்கிருந்து சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் வெங்கடேஷ்! இன்று திடீரென சிகிச்சை பலனின்றி இறந்து போனார் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இதுகுறித்து அவரது தந்தை கந்தசாமி கள்ளக் குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதில் ஏமப் பேர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் சிவா என்பவர் சுடு சாம்பலை டிராக்டரில் கொண்டு வந்து ஏமப்பேர் ஏரியில் கொட்டியுள்ளார்.

சுடு சாம்பல் கொட்டியது தெரியாமல் தனது மகன் அதில் தவறி விழுந்து தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறியுள்ளார். சப்-இன்ஸ் பெக்டர் பச்சையப்பன் மற்றும் போலீசார் வழக் குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் பள்ளி மாணவன் உயிரிழந்ததையடுத்து கள்ளக்குறிச்சி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவல்துறையினர், ஏரியில் சுடு சாம்பலை கொட்டிய டிராக்டரை கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோடு பகுதியில் மில்லில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கிருந்து அதனை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள சிவாவை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சுடு சாம்பலில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

Topics

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

Entertainment News

Popular Categories