December 6, 2025, 10:49 AM
26.8 C
Chennai

மரத்தின் பொந்தில் சிக்கிய கரடி!

bear
bear

மரத்தில் சிக்கி கொண்டு காயமடைந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் கிழக்குப் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் இருக்கும் ஒரு மரப்பொந்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது.

இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த கரடி தேன் கூட்டை பார்த்ததும் வேகமாக மரத்தில் ஏறி உள்ளது.

இதனை அடுத்து தேன் குடித்து கொண்டிருந்த போது கரடியின் கை அந்த மரத்தில் இருந்த பொந்திற்குள் வசமாக சிக்கி கொண்டது. இதனால் காயமடைந்த கரடியால் மரத்திலிருந்து கீழே இறங்க முடியவில்லை.

மேலும் அந்த மரத்திற்கு கீழே 2 கரடிகள் சுற்றி கொண்டிருந்தது. இதனையடுத்து தேயிலை பறிப்பதற்காக சென்ற தொழிலாளர்கள் கரடிகளை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

bear 2
bear 2

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மரத்திற்கு கீழே நின்று கொண்டிருந்த இரண்டு கரடிகளையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

அதன் பிறகு மரத்தை அடியோடு வெட்டி கீழே சாய்த்து கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மரம் வெட்டி சாய்க்கப்பட்டும் கரடி வெளியேற முடியாமல் தவித்த நிலையில்,

மரத்தில் சிக்கிய கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். இதனை அடுத்து மரத்தில் சிக்கிய கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கரடியின் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் கூண்டில் அடைத்து அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அப்பகுதியில் கரடி தாக்கி 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories