மரத்தின் பொந்தில் சிக்கிய கரடி!

bear
bear

மரத்தில் சிக்கி கொண்டு காயமடைந்த கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை எஸ்டேட் கிழக்குப் பிரிவு 10-ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் இருக்கும் ஒரு மரப்பொந்தில் தேனீக்கள் கூடு கட்டியுள்ளது.

இந்நிலையில் தோட்டத்திற்குள் புகுந்த கரடி தேன் கூட்டை பார்த்ததும் வேகமாக மரத்தில் ஏறி உள்ளது.

இதனை அடுத்து தேன் குடித்து கொண்டிருந்த போது கரடியின் கை அந்த மரத்தில் இருந்த பொந்திற்குள் வசமாக சிக்கி கொண்டது. இதனால் காயமடைந்த கரடியால் மரத்திலிருந்து கீழே இறங்க முடியவில்லை.

மேலும் அந்த மரத்திற்கு கீழே 2 கரடிகள் சுற்றி கொண்டிருந்தது. இதனையடுத்து தேயிலை பறிப்பதற்காக சென்ற தொழிலாளர்கள் கரடிகளை பார்த்ததும் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

bear 2
bear 2

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மரத்திற்கு கீழே நின்று கொண்டிருந்த இரண்டு கரடிகளையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

அதன் பிறகு மரத்தை அடியோடு வெட்டி கீழே சாய்த்து கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மரம் வெட்டி சாய்க்கப்பட்டும் கரடி வெளியேற முடியாமல் தவித்த நிலையில்,

மரத்தில் சிக்கிய கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளனர். இதனை அடுத்து மரத்தில் சிக்கிய கரடியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கரடியின் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் கூண்டில் அடைத்து அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே அப்பகுதியில் கரடி தாக்கி 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Topics

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories