இரண்டு சுரங்கப்பாதைகளின் நடுவில் விமானம் செலுத்தி கின்னஸ் சாதனை!

race
race

மிக நீளமான சுரங்கப்பாதை வழியாக விமானம் பறந்து கின்னஸ் உலக சாதனையையும் டாரியோ கோஸ்டா பெற்றார்.

பிரபல எனர்ஜி ட்ரிங்க் நிறுவனமான ரெட் புல் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அது தற்போது பலரால் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது

அதில், ஒரு இத்தாலிய விமானி டேரியோ கோஸ்டா துருக்கியில் அமைந்துள்ள இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக சிரமமின்றி விமானத்தை செலுத்தினார், இதை கண்ட இணையவாசிகள் ஆச்சர்யத்தில் உறைந்தனர்.

வைரல் வீடியோவில் பைலட் விமானத்தை இரண்டு சுரங்கங்களுக்குள் புகுந்து பறக்கிறார். செப்டம்பர் 4 அதிகாலையில் அவர் தனது ரேஸ் விமானத்தை நாட்டின் புகழ்பெற்ற கட்டல்கா சுரங்கப்பாதைகள் வழியாக சராசரியாக மணிக்கு 250 கிமீ வேகத்தில் பறக்கச் செய்தார்.

ரெட் புல் வெளியிட்ட பதிவில் எழுதியிருந்ததாவது, “டாரியோ கோஸ்டா இரண்டு சுரங்கப்பாதைகள் வழியாக விமானத்தை ஓட்டிய முதல் நபராக ஆகிறார், நாங்கள் வாயடைத்துப் போய் இருக்கிறோம்.”

ரெட் புல் பகிர்ந்த ஒரு சமூக வலைத்தள வீடியோ பதிவில், கோஸ்டா பின்வருமாறு கூறினார், “எல்லாமே மிக வேகமாக நடப்பதாகத் தோன்றியது, ஆனால் நான் முதல் சுரங்கப்பாதையில் இருந்து வெளியே வந்தபோது, ​​விமானம் வலதுபுறம் நகரத் தொடங்கியது, அப்போது என் மூளை மெதுவாக செயல்பட்டது.

நான் தொடர்ந்து போராடி எதிர்வினையாற்றினேன், அடுத்த சுரங்கப்பாதையில் நுழைய சரியான பாதையில் விமானத்தை திருப்புவதில் கவனம் செலுத்தினேன். பிறகு, என் மனதில், எல்லாம் மீண்டும் வேகமெடுத்தது. வெற்றிகரமாக முடித்தேன். ” என்றார்.

அவர் இந்த செயலை செய்த முதல் நபர் ஆனது மட்டுமல்லாமல், விமானம் மூலம் பறந்த மிக நீளமான சுரங்கப்பாதைக்கான கின்னஸ் உலக சாதனையையும் பெற்றார்.

பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும் இந்த வீடியோ, ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வைரலாகியது. இது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றது.

இருப்பினும் சிலர் அதற்கு எதிராக கருத்துகளையும் கூறினர். ட்விட்டரில் ஒருவர் “அது சில தவறான விமானம் இயக்கும் திறன்” என்று கூறி தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

இந்த வீடியோ எப்படி படமாக்கப்பட்டது என்று மேலும் லாஜிக் கேள்விகள் கேட்டார். ஒரு சிலர் அதில் ஈர்க்கப்படவில்லை. ஒரு பயனர் இதை ‘அர்த்தமற்றது’ என்று கூட அழைத்தார்.

ஹங்கேரியின் விமானப் ஏவியேஷன் பீட்டர் பெசன்யே கோஸ்டாவுக்கு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, இந்த சுரங்கப்பாதை விமான இயக்குதல் திட்டத்திற்கு 40 பேர் கொண்ட குழு, சிறப்பாக உருவாக்கப்பட்ட பயிற்சி தொழில்நுட்பம் சேர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக தயாரிப்பு தேவைப்பட்டது. அதன் மூலமாகவே இது சாத்தியம் ஆனது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories