உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் பி பிரிவு 35 ஆவது லீக் சுற்றுப் போட்டியில், இலங்கை ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட் செய்யக் களம் இறங்குவதாக அறிவித்தது. அதன் படி களம் இறங்கிய இலங்கை வீரர்கள், சிறப்பான துவக்கம் அளித்து ரன் சேர்த்தனர். திரிமனே 4 ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், சங்ககரா, தில்ஷன் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் சதம் அடித்து அசத்தினர். சங்ககரா 124 ரன் எடுத்தார். தில்ஷன் 104 ரன் எடுத்தார். பின்னர் நடுவரிசையில் மேத்திவ்ஸ் 21 பந்துகளில் 51 ரன் என அதிரடி காட்டினார். இதனால் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 363 ரன் என்ற பெரும் இலக்கை ஸ்காட்லாந்து அணிக்கு நிர்ணயித்தது.
உலகக் கோப்பை: இலங்கை 363 ரன் குவிப்பு
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

