நாளை ஆட்டோ இயங்கும்: இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி தகவல்!

hindu-munnani
hindu-munnani

நாளை ஆட்டோக்கள் இயங்கும் என்று இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாநிலத் தலைவர் மணலி த. மனோகரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது…

நாளை கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ள பந்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கும் போல் ஆட்டோக்கள் இயக்கப்படும்..

உலகமே சீன வைரஸ் தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளதை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளோம். இப்போது நிலைமை சீரடைந்து வரும் நிலையில் தேவையற்ற பந்த் அறிவிப்பது, தமிழகத்தில் ஆளும் கட்சியின் கூட்டணியில் இருப்பதால் கம்யூனிஸ்ட்கள் அச்சுறுத்தலில் இருங்குவது கண்டிக்கத்தக்கது.

கம்யூனிஸ்ட் கொடுத்துள்ள கோரிக்கைகள் எதுவும் ஆட்டோ தொழிலாளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. இவை அனைத்தும் கம்யூனிஸ்ட்களின் அரசியல். இதனை கடுமையாக எதிர்க்கிறோம். தொழிலாளர்களை அச்சுறுத்தும் இதுபோன்ற போக்கை காவல்துறை தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

hindu auto munnani
hindu auto munnani

இந்த இக்கட்டான நிலையும் சீரடைவதற்கு மத்திய அரசு அனைவருக்கும் இலவசமாக கொடுத்த தடுப்பூசியே காரணம். தடுப்பூசி பற்றி மக்களிடையே தவறான கருத்தினை பரப்பி, குழப்பிய சமூக விரோதிகளால் தான் சீரடைவதற்கு சில மாதங்கள் தாமதமாயின என்பதை ஊடகங்களும், மக்களும் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த தவறான பிரச்சாரத்தை, கருத்தை வெளியிட்டவர்கள் யார்? இதே கம்யூனிஸ்ட், திராவிட கட்சிகள் தானே? நிலைமை சீரடைந்து வரும் நிலையில் பந்த் அறிவித்து அரசியல் செய்ய நினைக்கிறது கம்யூனிஸ்ட் கட்சி, இதற்கு துணைபோகிறது கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள்.

கொரானா ஊரடங்கின் போது நமது சங்கம் கலெக்டரிடம் நிவாரணம் வழங்க கோரி மனு கொடுத்தது. அப்போது இந்த கம்யூனிஸ்ட் சங்கங்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஓடிகொண்டிருக்கும் ஆட்டோவை நிறுத்தித்தான் நிவாரணம் கேட்க வேண்டும் என்பது கம்யூனிஸ்ட்களின் கீழ்த்தரமான செயல்பாடு. தற்போது பண்டிகை காலம் நெருங்கி வரும் காலத்தில் மக்களை சிரமப்படுத்துவதே இதன் நோக்கம் என்று சந்தேகிக்கிறோம்.

எனவே, 27.9.2021 அன்று அறிவித்துள்ள பாரத் பந்தில் இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கலந்துகொள்ளாது. வழக்கம் போல் எங்களது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஆட்டோக்கள் இயங்கும். இதற்கு தக்க பாதுகாப்பும், ஒத்துழைப்பும் காவல்துறையும், தமிழக அரசும் வழங்கும் என நம்புகிறோம்… என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories