பாட்டி வீட்டு மரத்தின் பழத்தை உண்ட குழந்தைகள் உயிரிழப்பு!

bro sis
bro sis

குழந்தைகள் 2 பேர் தங்கள் பாட்டி வீட்டின் தோட்டத்தில் இருந்த பழத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலம்பியா நாட்டின் Montecitos என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 வயதுள்ள ஜோஃப்ரான் சாயா மற்றும் அவரது சகோதரி அமிரா சாயா(3) ஆகிய இருவரும் ஆப்பிள் சாப்பிடுவதாக நினைத்துக் கொண்டு குறித்த பழங்களை சாப்பிட்டுள்ளனர்.

அப்போது சிறுவர்கள் 2 பேரும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாந்தி மற்றும் வலிப்பு நோயால் சிரமப்பட தொடங்கினர். இவ்வாறு சிறுவர்கள் சாப்பிட்ட அந்த பழமானது உள்ளூரில் bola de toro என அறியப்படுகிறது.

இதில் விஷத்தன்மை கொண்ட இந்த மரமானது 10 அடி உயரம் வரையிலும் வளரும் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறுவர்கள் 2 பேரையும் அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதனையடுத்து 2 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி சிறுவர்கள் 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இவர்களில் சிறுவன் 6 மற்றும் சிறுமி 4 பழங்களை தின்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் வெனிசுலாவில் சேர்ந்த குடும்பம் என்பதால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற முடியாமல் போனது.

மேலும் சிறுவர்களை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தாமதம் நிலவியதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் சிறுமியின் நிலை ஒரு கட்டத்தில் கவலைக்கிடமாக மாறி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் இறுதியில் சிறுமி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோர் கொலம்பியாவின் ஓம்புட்ஸ்மேன் அலுவலகத்தில் உதவி பெற முடிவு செய்தனர்.

இதன் காரணமாக சிறுவனை உயர் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியும் என அவர்கள் நம்பியுள்ளனர்.

இதனைதொடர்ந்து ஓம்புட்ஸ்மேன் அலுவலகம் உடனடியாக அனுமதி கொடுத்ததும், அவர்கள் Cucuta நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே சிறுவன் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு விஷத்தன்மை கொண்ட பழம் சாப்பிட்டு உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் வெனிசுலாவில் இருந்து கொலம்பியாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

இந்த குடும்பத்தினர் சிறுவர்களின் பாட்டி குடியிருப்பிலேயே வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில் வீட்டு தோட்டத்தில் அந்த மரத்தை வளர்ப்பவர்கள் உடனே அதை வெட்டி வீச வேண்டும் என்று நகர நிர்வாகம் மற்றும் போலீஸ் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories