அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி! பெஞ்சமின் கைது!

penjamin
penjamin

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி போலி அரசாணை வழங்கி 40 லட்சம் மோசடி செய்தவரை 24 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறை.

தனக்கு அரசு உயரதிகாரிகளை தெரியும் என்றும், பல பேருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பதாகவும் கூறி சினிமா பாணியில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளது காவல்துறை.

செங்கல்பட்டு மாவட்டம், கானாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை பெஞ்சமின். இவர், கல்வித் துறையில் ஆய்வாளராக பணியாற்றி வருவதாகவும், தனக்கு அரசு உயரதிகாரிகளை நன்கு தெரியும் என்றும், ஏராளமானோருக்கு அரசு வேலைகள் வாங்கி கொடுத்துள்ளதாகவும் கூறி வந்துள்ளார்.

இதை நம்பி, ராமநாதபுரத்தை சேர்ந்த விக்னேஷ் ராஜா என்பவர், தனது குடும்பத்தினருக்கு அரசு வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதற்காக குறிப்பிட்ட தொகையை பெஞ்சமின் பெற்றுள்ளார்.

இதேபோல் பலரிடமும் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், டிரைவர், பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அரசு வேலைகள் பெற்றுத் தருவதாக் கூறி, பணம் பெற்றுள்ளார் ஏழுமலை பெஞ்சமின்.

பணம் கொடுத்தவர்கள் வேலை குறித்து கேட்டபோது, அதில் சிலருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார் பெஞ்சமின்.

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் சேர வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அது போலி பணி நியமன ஆணைகள் என்பதும், தாங்கள் ஏமாற்றபட்டிருப்பதும் தெரியவந்தது.

மீதமுள்ள நபர்களும் நெருக்கடி கொடுத்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து பணி நியமன ஆணையை பெற்றுக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார் ஏழுமலை பெஞ்சமின்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு போலி நியமன ஆணைகளுடன் வந்தபோது, பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஏழுமலை பெஞ்சமினை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க, மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிற்கு உத்தரவிட்டார்.

இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், ஏழுமலை பெஞ்சமின்-ஐ பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், ராமநாதபுரத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 22 பேரிடம் 40 லட்சம் ரூபாய் பெற்று, ஏழுமலை பெஞ்சமின் போலி பணி நியமன ஆணைகளை வழங்கியது உறுதி செய்யப்பட்டது.

இதன்பேரில் மோசடியில் ஈடுபட்ட ஏழுமலை பெஞ்சமினை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories