2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களா.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

corona
corona

கொரோனாவின் டெல்டா மாறுபாடு, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கூட பாதிக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

கொரோனா காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போதாது என்று உருமாறிய கொரோனா மாறுபாடு, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ந்து பரவிக்கொண்டே வருகிறது..

இதனிடையே கொரோனா தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் INSACOG கூட்டமைப்பு, CSIR மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இரண்டு தில்லி மருத்துவமனைகளில் டெல்டா மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கூட பாதிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது..

மேலும் ” தடுப்பூசி, நோயின் தீவிரத்தை தடுக்கிறது என்றாலும், திருப்புமுனையை ஏற்படுத்தும் நோய்த்தொற்றின் நிகழ்வுகள் உள்ளன. இதனால் மிகவும் டெல்டா மாறுபாடு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பரவும் அபாயமும் உள்ளது.” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மனநிறைவை அடையும் மக்களுக்கு இந்த புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெளிவான எச்சரிக்கை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்கள் கொரோனா தொற்றை கடத்துவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல. தடுப்பூசியின் 2 டோஸ் போட்டுக்கொண்ட நபர்களிடையே வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே 2 டோஸ் தடுப்பூசி போட்ட மக்களும், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியத்தை ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே தடுப்பூசி போட்டவர்களும், மாஸ்க் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories