2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களா.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

corona
corona

கொரோனாவின் டெல்டா மாறுபாடு, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கூட பாதிக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

கொரோனா காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போதாது என்று உருமாறிய கொரோனா மாறுபாடு, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ந்து பரவிக்கொண்டே வருகிறது..

இதனிடையே கொரோனா தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் INSACOG கூட்டமைப்பு, CSIR மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இரண்டு தில்லி மருத்துவமனைகளில் டெல்டா மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கூட பாதிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது..

மேலும் ” தடுப்பூசி, நோயின் தீவிரத்தை தடுக்கிறது என்றாலும், திருப்புமுனையை ஏற்படுத்தும் நோய்த்தொற்றின் நிகழ்வுகள் உள்ளன. இதனால் மிகவும் டெல்டா மாறுபாடு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பரவும் அபாயமும் உள்ளது.” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மனநிறைவை அடையும் மக்களுக்கு இந்த புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெளிவான எச்சரிக்கை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்கள் கொரோனா தொற்றை கடத்துவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல. தடுப்பூசியின் 2 டோஸ் போட்டுக்கொண்ட நபர்களிடையே வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே 2 டோஸ் தடுப்பூசி போட்ட மக்களும், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியத்தை ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே தடுப்பூசி போட்டவர்களும், மாஸ்க் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories