2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களா.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

corona
corona

கொரோனாவின் டெல்டா மாறுபாடு, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கூட பாதிக்கலாம் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.

கொரோனா காரணமாக கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இது போதாது என்று உருமாறிய கொரோனா மாறுபாடு, 2-வது அலை, 3-வது அலை என தொடர்ந்து பரவிக்கொண்டே வருகிறது..

இதனிடையே கொரோனா தொடர்பான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் INSACOG கூட்டமைப்பு, CSIR மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (NCDC) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்களால் இரண்டு தில்லி மருத்துவமனைகளில் டெல்டா மாறுபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், கொரோனாவின் டெல்டா மாறுபாடு, 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை கூட பாதிக்கலாம் என்பது தெரியவந்துள்ளது..

மேலும் ” தடுப்பூசி, நோயின் தீவிரத்தை தடுக்கிறது என்றாலும், திருப்புமுனையை ஏற்படுத்தும் நோய்த்தொற்றின் நிகழ்வுகள் உள்ளன. இதனால் மிகவும் டெல்டா மாறுபாடு பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு பரவும் அபாயமும் உள்ளது.” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு மனநிறைவை அடையும் மக்களுக்கு இந்த புதிய ஆய்வின் கண்டுபிடிப்புகள் தெளிவான எச்சரிக்கை என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

2 டோஸ் தடுப்பூசி போட்ட நபர்கள் கொரோனா தொற்றை கடத்துவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல. தடுப்பூசியின் 2 டோஸ் போட்டுக்கொண்ட நபர்களிடையே வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

எனவே 2 டோஸ் தடுப்பூசி போட்ட மக்களும், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டிய அவசியத்தை ஆய்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே தடுப்பூசி போட்டவர்களும், மாஸ்க் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா நெறிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories