சபரிமலையில் டிச.27ல் மண்டலாபிஷேகம்!

sabarimala at night - 2026

சபரிமலையில் சுவாமி ஐயப்பனுக்கு வரும்‌ 27 ஆம் தேதி மண்டலாபிஷேகம் மண்டல பூஜை நடைபெறும். அன்று காலை 10.10 முதல் 11.30 வரை மண்டல பூஜை நடத்த சபரிமலை தந்திரி நேரம் குறித்துள்ளார்.

சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு இந்த ஆண்டு மண்டல பூஜையின் முகூர்த்தம் 27 ஆம் தேதி காலை 10.10 முதல் 11.30 மணிக்குள் இருக்கும் என்று கூறினார்.

பூஜையுடன் தொடர்புடைய தீபாராதனை காலை 11.30 மணிக்கு நிறைவடையும். மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்ப சுவாமி மீது வைக்கப்படும் தங்க அங்கியை சுமந்து செல்லும் ரத ஊர்வலம் 23 ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆரன்முள பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்படும்.

தீபாராதனைக்கு முன்னதாக மாலையில் சபரிமலை சன்னிதானத்தை அடையும். ஐயப்பன் சிலை மீது தங்க அங்கி வைக்கப்பட்டு மாலை 6.30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். 27 ஆம் தேதி மதியம் தங்க அங்கி வைக்கப்பட்டு மண்டல பூஜை நடைபெறும். பின்னர், 27 ஆம் தேதி இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி கோயில் மூடப்படும். மகரவிளக்கு விழாவிற்காக 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் மீண்டும் திறக்கப்படும் என்று தந்திரி தெரிவித்தார்.

மண்டல பூஜைக்காக திருவிதாங்கூர் மகாராஜா ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அர்ப்பணிக்கப்பட்டது. டிசம்பர் 23 ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7 மணி வரை ஆரன்முளா கோயில் முற்றத்தில் தங்க அங்கியைக் காண பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாவது சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாசம் ஏதும் வழங்கப்படவில்லை தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் இந்த வழி பாதையில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் காலை 7 மணி முதல் பகல் ஒரு மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் சொல்ல முடியும்.

அதற்குப் பிறகு பெருவழி பாதையில் செல்வதற்கு அனுமதி இல்லை இது போல் சத்தரம் பாதை வழியாக தினமும் 1,000 பக்தர்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது வழக்கம் போல் செயல்படுகிறது என தெரிவித்தார்

சபரிமலையில் தற்போது பெரும் கூட்டம் அளவுக்கு அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் திருவாங்கூர் தேவசம்போர்டு செய்து கொடுத்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories