ஒமைக்ரான்: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம்: நுண்ணுயிரியல் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர்!

booster - 2026

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளில் பரவி வருகிறது. இதனால், அச்சமடைந்துள்ள உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது.

இந்திய அரசும் நடவடிக்கைகள் எடுத்துள்ளதோடு மாநில அரசுகளுக்கும் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கொடிய வகை ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து அவ்வப்போது ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் துணை அமைப்பான நுண்ணுயிரியல் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனரும், நச்சுயிரியல் நிபுணருமான டாக்டர் டி.ஜேக்கப் ஜான், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்து விளக்கியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது:- நாட்டில் 30 சதவீதத்தினர்தான் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். கோப்பையில் மூன்றில் ஒரு பங்குதான் நிரம்பி உள்ளது.

Dr D Jacob John - 2026

இப்போது உருமாறிய கொரோனா வைரஸ் நுழைந்து, வேகமாக பரவினால் அது கணிக்க முடியாத ஒன்று. ஆனால் இது மக்கள் பயப்படுவதுபோல மோசமாக இருக்காது. 2 விஷயங்களை கவனிக்க வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்களுக்கு அதைப் போட வேண்டும். 2 டோஸ் போட்டுக்கொண்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டும்.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசிதான் புதிய உருமாறி வைரசுக்கு எதிரான எளிய தடை ஆகும். இதை உடனடியாக தொடங்கி விட வேண்டும்.

இதேபோன்று முதல் டோஸ் போட்டு இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ளாதவர்களுக்கு அதை உடனே போட வேண்டும். கர்ப்பிணிகளும் முதல் கர்ப்பத்தின்போது 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்.

உயர்ந்த அளவிலான நோய் எதிர்ப்புச்சக்தியை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி மூலம் எதிர்பார்க்க முடியும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியானது நோய்த்தொற்றுக்கு எதிராகவும், பரவும் தன்மைக்கு எதிராகவும் அதிக பாதுகாப்பானது.

ஒமைக்ரானைப் பொறுத்தமட்டில் 34 உருமாற்றங்கள் கவனிக்கப்பட்டுள்ளன. இது ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் பிற உருமாறிய வைரஸ்களைவிட அதிக அளவிலானது.

அசல் கொரோனா வைரசின் பரவும் அடிப்படை நிலை 1 என்று வைத்துக்கொண்டால், டெல்டா 2 முதல் 3 மடங்கு அதிகமாகவும், ஒமைக்ரான் இன்னும் அதிகமாகவும் இருக்கும். 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்பது சுவிட்சர்லாந்து விஞ்ஞானி ஒருவரின் கருத்து ஆகும்.

டெல்டா வைரசை ஒமைக்ரான் வைரசுடன் ஒப்பிடுகையில், ஒமைக்ரான் மிகவும் திறமையாக பரவக்கூடியது. 2 தடுப்பூசிகளால் கிடைத்த நோய் எதிர்ப்புச்சக்தியை எதிர்க்கும், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories